
இஸ்லாமிய நூல்கள் யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப்போகுமென்றும் அதிலிருந்து தங்கக் குவியல்கள் வெளிப்படுமென்றும் அதை எடுக்க இறுதிக்கால மக்கள் போட்டி போடுவதால் ஒரு பெரிய யுத்தமே உண்டாகுமென்றும், அதில் நூற்றில் தொன்னத்தொன்பது பேரும் செத்துப் போவார்கள் என்றும் சொல்லுகின்றது. அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்தால் அந்த புதையல்களை எடுக்கக்கூடாது எனவும் சாகிக் புகாரி தெரிவிக்கின்றது.
கிறிஸ்தவ நூலான வெளிப்பாடு யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப் போகுமென்றும் அது காய்ந்த தரை வழியாக பெரும் படை ஒன்று கடந்து சென்று ஒரு பெரிய யுத்தமிடும் என்றும் தெரிவிக்கின்றது.
உங்களால் நம்பமுடிகின்றதா? போன மாத நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வற்றா ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த யூப்ரடிஸ் நதி இப்போது வற்றிக் கொண்டிருப்பதாக சொல்கின்றது. இன்டரெஸ்டிங் தான்.
No comments:
Post a Comment