Thursday, October 8, 2009

மிஸ்ஸாகும் மூக்கு

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.

இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா நம்ம போன் சும்மா அதிருது...கால் வந்தா சும்மா வைப்ரேட் ஆகுதே அதெப்படிடானு கேட்டுத் தொலைத்தான் கோபால். கப்பாசிட்டர், ரெசிஸ்டர், டயோடு, டிரான்சிஸ்டர் மாதிரி இதற்கும் எதாவது வைப்ரேட்டர் சிப் கண்டுபிடித்து விட்டார்களோவென்பது அவன் யூகம். கொஞ்சம் குறைய அவன் சொன்னது சரிதான். சிப் எதுவுமில்லை. மைக்ரோசைசில் ஒரு எந்திர மோட்டார் உங்கள் போனில் இருக்குமாம். வாசிங்மெசின் வேகமாக சுத்தும்போது அது ”ஒரு மாதிரியா” அதிரும் பாருங்கள் அதே நுட்பம்தான் இங்கேயும். வேறே சிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

போனை நீங்கள் குறுக்காக பிடித்தால் திரையை உங்களுக்கு குறுக்காகக் காட்டவும் நெடுக்காக போனை பிடித்தால் திரையை உங்களுக்கு நெடுக்காகக் காட்டவும் Accelerometer என்ற ஒரு சிலிக்கான் சில்லுவை பயன்படுத்துகின்றார்கள். சத்தியமா அது புவியீர்ப்புவிசையை வைத்து பொசிசனை கண்டுபிடிப்பதில்லையாம். பின்னே எப்படி கண்டுபிடிக்குதாம்?
தலைசுற்றுகின்றது.

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் நம் குரல்கள் அனலாக் தொழில்நுட்பத்தில் கடத்தப்படுவதால் ஒரு Baseband Processor-ம் பிற டிஜிட்டல் மென்பொருள் பயன்பாடுகளை ஓட்ட ஒரு Application Processor-ம் என இரு புராசசர்கள் இருக்கும். நோக்கியா போன்களில் பொதுவாக Texas Instruments புராசசர்களையும், பிளாக்பெர்ரிகளில் Qualcomm புராசசர்களையும், ஐபோன்களில் Samsung மற்றும் Infineon புராசசர்களை காணலாம்.

நமது கோப்புகளை சேமித்துவைக்க ஸ்மார்ட்போன்களின் உள்ளே ஹார்ட் டிஸ்கெல்லாம் கிடையாது. எல்லாம் Gig கணக்கில் NAND Flash DRAM-கள் தான். ஐபோனுக்கு Toshiba-வும்,பிளாக்பெர்ரிக்கும் நோக்கியாவுக்கும் Samsung-கும் இந்த DRAM-களை வழங்குகின்றார்கள். எல்லாம் சிலிக்கான் சில்லுகள் தாம்.

இது தவிர
புவியில் நாம் இருக்கும் இடம் தெரிய GPS,
திசைமாறிப்போனவனுக்கு திசை காட்ட Compus,
வீட்டு அல்லது அலுவலக இணையத்தோடு இணைய Wi-Fi,
பக்கத்து போனோடு இணைந்து MP3க்களை கடத்த Bluetooth மற்றும் Infrared
வேகமாய் திரையில் படம் ஓட, வீடியோ கேம் விளையாட Graphics Processor,
நம்மை நாமே படம் பிடித்துக்கொள்ள Camera ,
எக்ஸ்ரா ஸ்டோரேஜ்க்கு MicroSD Interface,
எப்.எம் பாட்டு கேட்க FM Radio Tuner,
நாம பேசுவதை Dual-band அல்லது Quad-band ஆக கடத்த RF Transceiver.

இப்படி இந்த ஐம்புலண்களில் மெய்(Touch Screen), வாய்(Speaker), கண்(Camera), செவி(Microphone) எல்லாம் சிலிக்கான் சிப் வடிவில் உள்ளே அந்த சிறிய பொட்டிக்குள்.
சிலிக்கான் என்றால் மண் என்று உங்களுக்கேத் தெரியும். எல்லாம் மண். ஆனால் உள்ளே தான் எத்தனை இண்டலிஜென்ஸ் நடக்கின்றது.
மனிதனும் மண் தான். அதே இண்டலிஜென்ஸ்.
இந்த வரிசையில் ஒரே வித்தியாசம் ஸ்மார்ட்போனில் மிஸ்ஸாகுவது மூக்கு.

plz read..................


அதற்காக அவர் நிறைய காகிதங்களில் கிறுக்கியிருக்கிறார் போல.
ஆரம்பகால அவர் இட்ட ஸ்கெட்களை இங்கே பார்க்கலாம்.Jack dorsey on flickr


செல்போன் SMS-ல் 140 எழுத்துக்கள் மட்டுமே கொள்ளும் என்பதால் அதே கட்டுப்பாடு டிவிட்டரிலும் வைக்கப்பட்டுள்ளது.போட்டோக்களை ட்வீட் செய்ய http://twitpic.com -ஐயும் URLகளை சுருக்கி ட்வீட் செய்ய http://tr.im -ஐயும் பயன்படுத்தலாம்.

ஆரம்பகாலங்களில் டிவிட்டர் Ruby on Rails-ல் தான் ஓடியதாம். இப்போது Scala. தங்கள் dns தேவைக்கு dyndns.com-ஐ தான் பயன்படுத்துகின்றார்கள்.

IE என அபூர்வமான இரண்டெழுத்து பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கு மைக்ரோசாப்டின் Internet Explore-க்கு சொந்தமானது http://twitter.com/ie

twitter-ல் அதிக followers கொண்டது ashton kutcher http://twitter.com/aplusk
followers 3,679,355

twitter-ல் அதிக Following கொண்டது Barack Obama http://twitter.com/BarackObama
Following 756709

twitter-ல் அதிகம் updates கொண்டது illstreet http://twitter.com/illstreet
updates 805702

twitter-ல் அதிகம் பேரால் favourite ஆக்கபட்டது yamifuu http://twitter.com/yamifuu
favourites 127709

நம் இந்தியாவிலிருந்து முதல் டிவிட்டர் Pajama Pockets http://twitter.com/pajama
first message on 28/07/2006

கீழே கலிபோர்னியா டிவிட்டர் அலுவகத்திலிருந்து சில படங்கள்




















நான்குமுண்டு

நமது கடந்த மூன்றுண்டு என்ற பதிவை படித்த நண்பரொருவர் இந்த நான்குமுண்டு என்ற வரிசையை நமக்கு அனுப்பித் தந்திருந்தார். விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்.அந்த நண்பருக்கு என் நன்றிகள்.

நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.

போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.

பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.

விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.

ஜிமெயில்காரி

கூகிளின் ஜிமெயில் சேவையானது நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றது. திடீரென அங்கே காலும் இங்கே கைகளும் என உருவாகி அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இப்படி அது நாளும் பரிணமிப்பதால் அவ்வளவு சீக்கிரமாக எந்த ஜிமெயில் பயனரும் இன்னொரு மெயில் சேவைக்கு எளிதில் மாறிவிடமாட்டார் என்றே தெரிகின்றது. கண்கவர் கலர்களில்லை. ஒரு கவர்ச்சியுமில்லை. ஆனால் எளிமையாகவே நம்மை கவர்ந்துவிட்டவள் அவள். உன்னைத்தானே காதலிப்போம் கரங்குவிப்போமென அந்த 146 மில்லியன் பயனர்களும் சொல்ல தினமும் ஆயிரக்கணக்கான காரணங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இங்கே மூன்று காரணங்கள் உங்களுக்காக.

ஹாட் மெயில்,யாகூ மெயில் போன்ற பிற மெயில் சேவைகளில் இருக்கும் உங்கள் பழைய மெயில்களையெல்லாம் இங்கே ஜிமெயிலுக்கு கொண்டுவர அவளே import வசதி செய்து கொடுத்திருக்கின்றாள். எனவே பல மின்னஞ்சல் கணக்குகளை இனிமேலும் நீங்கள் மெயிண்டெயின் செய்யாமல் அவற்றிலிருப்பதையெல்லாம் உங்கள் ஜிமெயிலில் இறக்குமதிசெய்து விட்டு மற்றவைகளை கமுக்கமாய் ஒழித்துவிடலாம். Settings---> Accounts and Import-ல் இதற்கான வசதிகளை நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். Esaya Inc-ன் TrueSwitch நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.


அவசர அவசரமாக அந்த HR-க்கு மெயில் அனுப்பிய பிறகுதான் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் அய்யே நாம Resume-ஐ அட்டாச் செய்யவில்லையே என்று. உடனே பட்டென அந்த மெயிலை ரிவர்சில் வாங்க இப்போது ஜிமெயிலில் வசதிசெய்து கொடுத்திருக்கின்றார்கள். இதை undo என்பர்.அதிக பட்சம் 10 நொடிகள் தான். அப்புறம் நோ..வே. அது HR பொட்டியில் போய் சேர்ந்திருக்கும்.Settings--->Labs-ல் சுட்டெலியை சுருளிச் சுருளி ரொம்ப கீழே போனால் Undo Send என ஒரு புது வசதியை பார்ப்பீர்கள். அதை enable செய்து கொள்ளவும். ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும் போதும் அது undo செய்ய நமக்கு 10 நொடி வாய்ப்பைக் கொடுக்கும். என்றைக்காவது உயிர் காக்கலாம்.


முன்பெல்லாம் மெயில் செக்அப் செய்ய எனது ஐபோனில் ஒவ்வொரு முறையும் அந்த மின்னஞ்சல் பயன்பாட்டை திறக்க வேண்டும். அப்போதுதான் அது போய் ஜிமெயில் செர்வரோடு தொடர்புகொண்டு என் மெயில்களை இறக்கி காண்பிக்கும். இப்போது Push என ஒரு நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அந்த மாதிரி செய்யவேண்டியதில்லை. அப்பப்போ அதுவே என் மெயில்களை உடன் உடன் இறக்கம் செய்து SMS வந்தால் கத்துவது போல அவ்வப்போது கத்துகின்றது. யாராவது மெயில் அனுப்பியிருப்பார்கள்.இந்த வசதியை பிளாக்பெர்ரி,நோக்கியாS60 மற்றும் விண்டோஸ் மொபைல் செல்போன்களிலும் enable செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும். http://www.google.com/mobile/products/sync.html#p=default

இப்படி இலவசமாய் தொடரும் இந்த ஜிமெயில்காரியின் சேவை இன்னும் நீடூழி வாழவேண்டும் என்றேன் நான். ஆனால் அந்த monopoly விஷயத்தில் எனத் தொடங்கிய கோபாலின் வார்த்தைகளையும் மீறி ஓடிச்சென்றது அந்த Amtrak தொடர்வண்டி.

யாருக்குச் சொந்தம்

மூன்றரை சதவீதம் டவுண் பேமண்ட் செலுத்தி FHA கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றாள் நிஷா அவசரம் அவசரமாக. தரமான பாடசாலைகள் உள்ள அமைதியான ஒரு புறநகர்ப்பகுதி.வீட்டெதிரே மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன குடும்பம் குடும்பமாக.இனிமேல் இவள் மாதம்தோறும் மார்கேஜ் எனப்படும் வீட்டுக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்த வேண்டும்.அடுத்த வருட வரி ஒப்புவிப்பின் போது ஒபாமா 8,000 டாலர்கள் சலுகை கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம். அதனால் தான் இந்த அவசரம்.

முப்பது வருடங்கள் கழித்து நீ அத்தனை கடனையும் கட்டி முடித்திருந்தாலும் அந்த வீடு என்றைக்குமே உனக்கு சொந்தம் ஆகாது என்றான் கோபால்.அதெப்படி என நிஷா டென்சனாக கோபால் ஒரு கதை சொல்லவேண்டி வந்தது.

பாண்டி பசார் பிளாட்பாரத்திலிருந்து 500 ரூபாய் கொடுத்து ஒரு காலணி வாங்குகின்றாய் என வைத்துக்கொள்வோம். அதை வீட்டிற்கு கொண்டு சென்று ஒரு மாதமாய் அணிந்து அழகு பார்க்கின்றாய். பூரண திருப்தி உனக்கு. ஆனால் அடுத்த மாத தொடக்கத்தில் உனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.அந்த காலணிகடைக்காரன் வந்து உன் வீட்டுக் கதவை தட்டுகின்றான். ஐந்து ரூபாய் கொடு அப்போது தான் அந்த காலணியை நீ வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை நான் இப்போது எடுத்துக்கொண்டு போய்விடுவேன் என்கின்றான். நீயும் ஐந்து ரூபாய் தானே என அதை கொடுத்து அவனை அனுப்பிவிடுகின்றாய். மீண்டும் அடுத்த மாதமும் உன் வீட்டுக் கதவு தட்டப்படுகின்றது.இப்போதும் ஐந்து ரூபாய் கேட்கிறான். நீயும் கொடுக்கின்றாய். அது பழக்கமாகி இப்போது மாதம் தோறும் ஒன்றாம் தேதியானால் அவன் கறாராக வந்து விடுகின்றான். ஐந்து ரூபாய் கொடுத்தால் நீ வைத்துக்கொள்ளலாம். கொடுக்காவிட்டால் அதை நான் எடுத்துக்கொள்வேன் என்கின்றான். இப்போது சொல் அந்த காலணி யாருக்குச் சொந்தம் உனக்கா அல்லது அவனுக்கா?

அரை மில்லியன் டாலர் கொடுத்து வீட்டை நீ வாங்கி சொந்தமாக்கிக் கொண்டாலும் வருடம் தோறும் நீ சில துக்கடா டாலர்களை வீட்டுவரியாக கடாசாவிட்டால் அவ்வீடு எளிதாக சர்க்காருக்குச் சொந்தமாகிவிடும். அத்தனை ஈவிரக்கமற்ற உலகம் இது என சொல்லி முடித்தான் கோபால். நிஷாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.

tamil kavithaikal

Sontha Sinthanai:
Sogam Mattumae Vaalkkai Kidaiyaathu!
Sugamagavae Yen Naalum Vaalnthu Vida Vum Mudiyaathu!
Simitum Nam Imaigal Oru Nodi Irutinaal Thaan Nam-maal Pala Nodigal Velichathil Vaala Mudium Yenbathai Mara Vaatheer..

Kavithai Sent by Ms.Nazmudeen


Tholvi enaku puthithalla

athanalthan avanai

marakka vendum

endru ninaikkum bodhu

kooda

En manathodu poradi thotru pogiraen.: ; _()

Kavithai Sent by aishwarya

kaadhalum, natpum
iru kavithaigal
Anbaana natpai

Nesikiren,

nesikum
Natpai

kadhallikiren!

Natpu un meedu
Kadal un natpin meedu.

Kavithai Send by kirthir1994


Nan Kodutha Kadithathai

vaithu Aval

Kappal Vittu

Vilayadi Kondu irukiraal

Thaniril Alla

“Yen Kanneeril”

Kavithai Send by suresh PRP


Karkalum silai aanathu
athu aval udhadugalal
ucharika padum podhu…………
mad in love

Submitted by Simbu





Wednesday, September 2, 2009

பீச்சு வாக்கில்

கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.

கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.

உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.

இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.

மது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.