Tuesday, September 1, 2009

அதி சின்னப் பயல்

காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” -என்று

நாமெல்லோரும் சின்னப்பயல்கள் தான். நாமென்ன நம்ம பூமியே இந்த மகா அண்டத்திலும் ஒரு சின்னப்பயலாம். இன்னும் கொஞ்சம் பெஞ்சிலேறி உந்திப் பார்த்தால் நம்ம சூரியனே கூட சின்னப்பயல் தானாம். இந்த அனிமேட்டட் ஜிப் படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கொஞ்சம் பொறுமை வேண்டுமாக்கும்.

How big is Earth in the Universe
Watch slowly what happens!!! The picture will be changing


No comments:

Post a Comment