கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.
உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.
இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.
நமது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.
நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.
பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?
கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.
புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.



கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
தமிழர் திருமணம்







உலகின் இறுதிக் காலங்களில் நடைபெறப் போவன பற்றி பல்வேறு மார்க்கங்களும் நூல்களும் சொல்வனவற்றை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை நம்மவர்கள் எஸ்கட்டாலஜி (Eschatology) என்கின்றனர். வரப்போவன பற்றி அறிவதில்தானே நம்மில் பலருக்கும் ஆர்வம். அதனால் தானே பலரும் ஆருடம் நோக்குகின்றோம் ஜோதிடம் பார்க்கின்றோம். சமீபத்தில் ஈராக்கில் ஓடும் சுமேரிய நாகரீகப் புகழ் யூப்ரடிஸ் நதி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று அறியக் கிடைத்தது.
பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்




1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும் ஆக்கிரமிக்காத மடிக்கணிணிகளே இன்றைக்கு வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கின்றன.1.5Tb external செங்கற்கட்டியை மடிக்கணிணியின் USB போர்ட்டில் செருகிக்கொண்டு நகர்வதில் நம் "Mobility"-யே தொலைந்துவிடுகின்றது. அதிலிருக்கும் மூவி ஒன்றை பார்க்க வேண்டுமானால் ஒரு மூலையிலேயே ஒண்டி இருக்க வேண்டுமாக்கும். External ஹார்டிரைவை ஒரு மூலையிலே சாத்தி வைத்துக் கொண்டு நாம் நகர்ந்துகொண்டே அதிலிருக்கும் கோப்புகளை படிக்க வசதியுள்ளதா?
அவன் பெயரும் கோபால் தான். ஆனால் இன்னொரு கோபால். சரியாகச் சொன்னால் 



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
துன்பமும் வேதனையும் என உலகம்









