Wednesday, September 2, 2009

பீச்சு வாக்கில்

கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.

கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.

உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.

இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.

மது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

பாவம் கடவுள்

நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.

ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே விஷ்யத்தை சொல்லிக்கொடுக்க மூன்று வேறு புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. இதில் எதை தெரிந்தெடுப்பது என நீங்கள் குழம்ப இணையமிருந்தால் பலரின் புத்தகவிமர்சனத்தையோ அல்லது ஸ்டார் ரேட்டிங்கையோ பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். கையடக்கமாயிருக்கும் பிளாக்பெர்ரியை தட்டித் தட்டி அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வதற்குள் விடிந்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்ததுமே உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம்.டைம் சோன் மாறி சால்ட்லேக் சிட்டியில் வந்திறங்கியிருக்கின்றீர்கள். ...பூம்...கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

மேலே படங்களை பார்த்தாலே புரியும். ஒன்றும் புரியவில்லையா இந்த வீடியோவை ஓட விட்டுப்பாருங்கள். புரியலாம்.

http://www.youtube.com/watch?v=nZ-VjUKAsao

குஜராத்தில் BE-யும் மும்பை IIT யில் MDes -ம் முடித்து விட்டு மேற்கே பறந்த பிரனாவ் மிஸ்டிரி(Pranav Mistry) MIT யில் இப்போது செய்துவரும் இந்த புராஜெக்டின் பெயர் SixthSense.

அம்பதோ அறுவதோ வருடம் கழித்து மூச்சு நின்று சொர்க்கம் போனால் அங்கு இதெல்லாம் இருக்குமாப்பாவென கோபாலைக் கேட்டேன்.
”பாவம்டா கடவுள்” என்றான்.

நிஜமாகவே பொய்

திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
அதையே ”மை டியர் குட்டிச் சாத்தான்” படம் பார்த்த மாதிரி 3D மூக்குக்கண்ணாடி போட்டு பார்த்தால் படம் முப்பரிமாணத்தில் இன்னும் எபக்ட் ஏறி நிஜமாகவே நம் கண் முன்னே நடப்பது போல தோன்றும். அங்கு நம் கண்கள் ஏமாந்திருக்கும்.
ஆனாலும் நான்கு பரிமாண எபக்ட் கிடைக்க ”பிரஸ்மீட்டில்” நிஜமாகவே நாமங்கிருந்திருக்க வேண்டும். நான்காவது பரிமாணமாக அங்கு நம் உணர்வில் நேரமும் கலப்பதால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகின்றது. ஆனாலும் எல்லாமே பொய். எல்லா பரிணாமங்களிலும் நம் அங்கங்கள் அநியாயத்துக்கும் ஏமாற்றப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு நான்காவது பரிமாணமாக மேலே நாம் பார்த்த ”நேரம்” என்பதே பொய் என்கின்றார்கள். பூமியை விட்டு விட்டு விண்ணில் வெகுதூரம் சென்றுவிட்டால் நாளென்றுமில்லை நேரமென்றும் இல்லை.இப்படி நான்காவது பரிமாணமே மாயை என்றாகும் போது மற்ற மூன்றும் கூட மாயையாகத்தான் இருக்க முடியுமோ? நேரம் என்று ஒன்று இல்லாத போதே நாம் இருக்கின்றது எனப்பட்டிருக்கின்றோம். மொத்தத்தில் இந்த நான்கு பரிமாண உலகில் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் போலிருக்கின்றது. ஒரு வேளை நான்கையும் தாண்டி ஐந்து ஆறென பல பரிமாணங்கள் உலகில் இருக்கலாமோ? நம் புலன்களால் தான் அதை உணரமுடியவில்லையோ?

அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்வதற்கு பதில் சொல்லேன் என்றான் கோபால்."பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர அதை ஒரு நாளென்கிறோம். சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றிவர அதை ஒரு மாதமென்கின்றோம். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் சமயத்தை ஒரு வருடம் என்கின்றோம். இதெல்லாம் தெளிவாக புரிகின்றது. ஆனால் வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? புரியாத புதிராக இருக்கின்றதே" என்றான்.

நாள், மாதம் மற்றும் வருடங்களின் வரவு பூமி,சந்திரன்,சூரியனின் நகர்வுகளை வைத்து கணக்கிடும் போது வாரம் மட்டும் எங்கிருந்து வந்தது. அது நமக்கு நெஜமாகவே தேவைதானா எனக் கேட்டான். அடப்பாவி உருப்படியா இருக்கின்ற அந்த வீக்கெண்டுக்கும் ஆப்புவச்சுடுவ போலிருக்கே என்றேன் நான்.

(மேலே படம்: தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் Julian Beever-ன் 3டி கோக் போத்தல் .மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://dalesdesigns.net/Beever.htm)

கத்தியோடு புத்தி

வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.

ஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.

குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.

ஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது? ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா? நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்?

அங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.

”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!!

நண்பா! நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.

விசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எலியின் மரணம்

புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.

மடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.

GPS-ம் WPS-ம்

தெல்லாம் சாத்தியமாவென யோசித்துக் கிடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலை மெனக்கெட்டு நாம் ஆரம்பித்த பணியை வெற்றிகரமாக முடிந்தபின் அதற்கு உலகம் தரும் வரவேற்பு அந்த சுமையையெல்லாம் இலகுவான சுகமாக்கிவிடும். புகழ்மிக்க ஆயிரம் பக்க அபூர்வ அரபிக் நாவல் ஒன்றை தமிழ்படுத்த மெனக்கெடுவது போன்றது அப்பணி. கூகிள் மேப்பில் காணப்படும் ஸ்டிரீட் வியூ வசதியைக் கொண்டுவர தெருதெருவாகப் போய் வேலைமெனக்கெட்டு வீடியோபிடித்து கணிணியில் ஏற்றினார்களாம். இறுதியில் நல்ல வரவேற்பு. இது போல இன்னொரு கும்பலும் தெரு தெருவாக ஆட்களை அனுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னொரு வேலை விஷயமாக.

ஒரு பொருளின் இருப்பிடத்தை கண்டறிய சேட்டலைட் வழியாலான ஜிபிஎஸ் (GPS) நுட்பங்கள் பிரபலமாயினும் அதின்மீதுள்ள நம்பிக்கை வல்லரசுகளுக்கே திகிலைத்தந்துள்ளன. உள்ள 24 சேட்டலைட் கும்பலில் ஒன்று செயலிழந்தாலும் நம் ஜிபிஎஸ் கருவிகள் சுணங்கிவிடுமாம். சியாட்டிலின் வானுயர் டவுண்டவுன் கட்டிடங்களினூடே கார் புகுந்ததும் இந்த ஜிபிஎஸ் கருவிகளால் சேட்டலைட்டை தொடர்புகொள்ள இயலாமல் போவதால் அவை கப்சிப்பாகின. இறைவனை வேண்டத்தொடங்குவோம்.

சேட்டலைட் நுட்பத்தை பயன்படுத்தாமல் அருகே இருக்கும் செல்போன் டவர்களை தொடர்புகொண்டு அது வழியாக நம் இருப்பிடத்தை கண்டறிவது இன்னொரு வழி. பேருந்தில் பயணிக்கும் போது நாம் ஊர்களைத் தாண்டிச் செல்லும்போது உங்கள் போனிலும் டவர் ஊர் பணகுடியிலிருந்து வள்ளியூருக்கு மாறுவதை கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ஒரு சின்னப் பிரச்சனை. அதுவால் வள்ளியூரில் நீங்கள் எந்த டீக்கடை முன்னால் டேராபோட்டுள்ளீர்கள் என மிகச்சரியாக சொல்ல முடியாது.

Wi-fi நான் எதிர்பார்த்த அளவுக்கு நம் ஊரில் புழக்கத்தில் இல்லை. குறுகிய டூரில் போன இடமெங்கும் ஒரு Wi-fi கூட கண்ணில் அகப்படாதது என் துரதிஷ்டமாகக் கூடயிருக்கலாம். இங்கே தெருவில் எங்கு போயினும் Wi-fiகள். பெரும்பாலும் Secured தான். இந்த Wi-fiகளை வைத்தே நாம் இருக்கும் இடத்தை அடையாளம் காணலாமென ஒரு கும்பலுக்கு தோண தெருத் தெருவாகப் போய் எந்த தெருவில் எந்தெந்த Wi-fi-க்கள் உள்ளன என குறிப்பெடுத்து ஒரு பெரிய டேட்டாபேசையே உருவாக்கியுள்ளனர் Skyhook காரர்கள். உலகமெங்கும் மொத்தம் பத்து லட்சம் Wi-fi களை குறித்து வைத்திருக்கின்றார்கள். உங்கள் இருப்பிடத்தை ஒருவர் கண்டறிய சேட்டலைட்டெல்லாம் போகவேண்டாம். பக்கத்தில் ஒரு Wi-fi இருந்தாலே போதும். Wi-Fi Positioning System (WPS) எனப்படும் இந்த நுட்பம் வழி இயங்கும் http://loki.com-ல் என் இருப்பிடத்தை கேட்டுப்பார்த்தேன் இரு நொடிகளில் மிகச் சரியாகச் சொன்னது. வழக்கமான என் GPS-சோ "Waiting for accuracy" - என சொல்லிக்கொண்டே இரு நிமிடம் எடுக்கும். அதுபோல துல்லியமும் மாறுபடுகின்றது. மேலே இடது படம்-WPS உதவி இல்லாமல் அவ்வளவு துல்லியமாக இல்லை, வலது படம்-WPS உதவியுடன் மிக துல்லியமாக இருக்கின்றது. இந்த மாதிரியான location aware பயன்பாடுகளால் நமக்கு நன்மைகள் என்னவாம்? உங்கள் இருப்பிடத்துக்கு மிக அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையை அல்லது மருந்து கடை எதுவென ஒரே சொடுக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கான் பட கோப்புகள் சிலசமயங்களில் தனியான .ico கோப்பாக வராமல் .exe அல்லது .dll கோப்புகளுக்குள் புதைந்து இரண்டற கலந்து ஒன்றாக வரும். இதுபோன்ற சமயங்களில் ஐகான் அல்லது .ico பட கோப்புகளை தனியாக பிரித்தெடுக்க icofx அல்லது GetIcons மென்பொருட்களை பயன்படுத்தலாம். சுட நல்ல டூல்.

பேசுங்க பேசுங்க


புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.

http://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.

அதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ? குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.

“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.

Torrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.
http://oneclickmoviez.com

தொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?!

சாதாரண பிரிண்டரிலிருந்து புத்தகம்

காகிதத்தின் இருபக்கத்திலும் பிரிண்ட் செய்யும் வசதி உள்ள (இதை Duplexing என்பார்கள்) பிரிண்டர் உங்களிடம் இல்லாவிடினும் சாதாரண மலிவு பிரிண்டர் மூலம் கூட தாளின் இருபக்கமும் அச்சிட்டு ஒரு புத்தகம் போல செய்யலாம் என நம் நண்பர் முகம்மது இஸ்மாயில் விளக்கியிருந்தார். அது எப்படி என அனைவருக்கும் பயன்படட்டுமேயென இங்கு ஒரு பதிவாகவேயிடுகிறேன்.

”விலை அதிகம் உள்ள பிரிண்டர்களில் தான் ஒரே நேரத்தில் இருபுறமும் அச்சிட இயலும். ஆனால் Canon LBP2900 போன்ற விலை குறைவான Entry Level Printer களிலும் இதை செய்ய இயலும். அதற்கான வழிமுறை இதோ,,,

மொத்தம் 150 page உள்ள doc.file லை புத்தகம் போல பிரிண்ட்செய்ய வேண்டி உள்ளது என்றால் 75 காகிதத்தை மட்டும் பிரிண்டரின் ட்ரேயில் வைக்கவும். இல்லை அதைவிட அதிகமாக வைத்தாலும் பிரச்சினை இல்லை.

பிறகு படத்தில் உள்ளபடி Print Range - All, மற்றும் Print - Odd Pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 1,3,5,7 ….. 149 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும்.

பிறகு ட்ரேயில் மீதம் உள்ள வெற்று தாள்களை எடுத்துவிட்டு பிரிண்ட் ஆகி வந்த 1 to 149 Odd Pages 75 சரியாக ட்ரே உள்ளே வைத்து மறுபடியும் ப்ரிண்ட் கொடுக்கவும். இப்ப அதில் Even pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 2,4,6,8 ….. 150 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

குறிப்பு - இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிரிண்டரானது பிரிண்ட் பண்ணி அடுக்கும் முறை தான். அதில் சரியான பக்கத்தை வைத்தால் தான் இரண்டு பக்க பிரிண்டிங் சாத்தியம். இல்லையென்றால் ஒரே காகிதத்தின் ஒரே பக்கத்திலேயே இரண்டு பக்கத்தையும் பிரிண்ட் செய்துவிடும். அல்லது அடுத்த பக்கத்தை தலைகீழாக பிரிண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் Document முதல் நான்கு பக்கத்தை மட்டும் சோதனை முறையில் வெறும் இரண்டு காகித்தை வைத்து பிரிண்ட் செய்து இதை நன்றாக புரிந்து செய்யவும். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் தேவையற்ற வீணடிப்பு சோதனைகள் வேண்டாம். LOL.”

நன்றி முகம்மது இஸ்மாயில்!!

xMax எனப்படும் wireless technology குறித்து அவர் விசாரித்து கேட்டிருந்தார். சுத்தமாக எனக்கு பரிச்சயம் இல்லாததால் மவுனமே எஞ்சியது. இந்நுட்பத்தை நம்மில் யாராவது பயன்படுத்தி இருந்தால் அனுபவத்தை சொல்லலாமே. பதிலுதவியாய் இருக்கும்.

"நண்பன் - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளும் பரிசு” என்றார் ஒருவர். பரிசுகளினால் பயன் உண்டு. ஆனால் அவற்றை விலை கொடுக்காமல் வாங்கமுடியாது. உண்மைதான்.

ண்பர்கள் சிலர் மென்புத்தகங்களை இறக்கம் செய்ய முடியவில்லையே என புகார் சொல்லியிருந்தார்கள். தீர்வாக http://www.scribd.com -ல் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

லையில் சிக்கிய ஒரு தமிழ் MP3 தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
http://www.nkdreams.com/music/index.php?dir=

சாணக்கியன் சொன்னது

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு
பெருசு சொன்னது (ஐன்ஸ்டீன்)


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!


தமிழர் திருமணம்

பள்ளிக்குப் பிறகு வழிகள்

பத்துக்குப் பிறகு பன்னிரண்டுக்குப் பிறகு என்ன செய்யலாமென யோசிப்பவர்களுக்கு ஒரு அருமையான விளக்கப்படம் இங்கே.
படத்தை சொடுக்கி அதை பெரிதாக்கிப் பார்க்கலாம். படிக்கலாம்.

Career Path Finder after higher secondary school SSLC or Plus two.

for zoom and see

வன்பொருள் காட்சியகம்

மதர்போர்டு (Mother board) டாட்டர் போர்டு (Daughter board) என்றிருந்த காலமெல்லாம் போய் இன்றைக்கு வித்தியாசமான காகிதம் ஒன்றில் ஒருவிதமான சிலிகான் மை கொண்டு இந்த மின்னணு சர்கியூட்டு போர்டுகளையெல்லாம் எளிதாக அச்சடிக்கலாமாவென Kovio காரர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான ஆய்வில் மில்லியன் கணக்கில் செலவும் போய்க் கொண்டிருக்கின்றது. ஆய்வின் முடிவில் உங்கள் கை மணிக்கட்டின் தோல்பரப்பில் அழகான கைக்கடிகாரத்தை அச்சிட்டு அனுப்பிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதை சூப்பர் அனிமேசனோடு எலக்ட்ரானிக் டாட்டூ என்பார்களாயிருக்கலாம். (Electronic tattoo).ஜாலிதான். அதுவரைக்கும் இன்றைய நம் பெரிய ஹார்டுவேர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மொத்தமாக இதோ அவையெல்லாம் ஒரே சார்ட்டில். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.


Computer Hardware Chart

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops

எஸ்கட்டாலஜி

உலகின் இறுதிக் காலங்களில் நடைபெறப் போவன பற்றி பல்வேறு மார்க்கங்களும் நூல்களும் சொல்வனவற்றை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை நம்மவர்கள் எஸ்கட்டாலஜி (Eschatology) என்கின்றனர். வரப்போவன பற்றி அறிவதில்தானே நம்மில் பலருக்கும் ஆர்வம். அதனால் தானே பலரும் ஆருடம் நோக்குகின்றோம் ஜோதிடம் பார்க்கின்றோம். சமீபத்தில் ஈராக்கில் ஓடும் சுமேரிய நாகரீகப் புகழ் யூப்ரடிஸ் நதி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று அறியக் கிடைத்தது.

இஸ்லாமிய நூல்கள் யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப்போகுமென்றும் அதிலிருந்து தங்கக் குவியல்கள் வெளிப்படுமென்றும் அதை எடுக்க இறுதிக்கால மக்கள் போட்டி போடுவதால் ஒரு பெரிய யுத்தமே உண்டாகுமென்றும், அதில் நூற்றில் தொன்னத்தொன்பது பேரும் செத்துப் போவார்கள் என்றும் சொல்லுகின்றது. அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்தால் அந்த புதையல்களை எடுக்கக்கூடாது எனவும் சாகிக் புகாரி தெரிவிக்கின்றது.

கிறிஸ்தவ நூலான வெளிப்பாடு யூப்ரடிஸ் நதி வரலாற்றின் இறுதிக்காலங்களில் வற்றிப் போகுமென்றும் அது காய்ந்த தரை வழியாக பெரும் படை ஒன்று கடந்து சென்று ஒரு பெரிய யுத்தமிடும் என்றும் தெரிவிக்கின்றது.

உங்களால் நம்பமுடிகின்றதா? போன மாத நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வற்றா ஜீவ நதியாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த யூப்ரடிஸ் நதி இப்போது வற்றிக் கொண்டிருப்பதாக சொல்கின்றது. இன்டரெஸ்டிங் தான்.

ஆரம்ப விண்ணியல்

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?

வாடகைக்கு

நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கும் ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” நிஜமாகிக் கொண்டே வருகின்றது. போன மாதம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு நாம் இந்த மாதம் காசு கட்டுவது போல போன மாதம் முழுக்க பயன்படுத்திய போட்டோஷாப் மென்பொருளுக்கான வாடகை கட்டணத்தை இந்த மாதம் நீங்கள் கட்டிவிட்டு ஒரேயடியாக ஜகா வாங்கிக்கலாம். கையில் காசிருந்தால் இன்னும் இரண்டு மாதம் கூட போட்டோஷாப்பை நீங்கள் வாடகைக்கு குறைந்த கட்டணத்தில் உங்கள் கணிணியில் வைத்துக் கொள்ளலாம். பைரேட்டட் மென்பொருள்களின் புழக்கத்தை தவிர்க்க இந்த மாதிரியான ”யுட்டிலிட்டி கம்ப்யூட்டிங்” ஒரு நல்ல நடைமுறை தான்.

இதற்கு கணிணியெல்லாம் தேவையில்லை. Computing without a computer என்ற கோஷத்தோடு வந்திருக்கின்றார் 25 வயது சச்சின் துக்கால்(Sacchin Duggal). இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு பறந்ததுகளில் இதுவும் ஒன்று.

nivioCompanion என செட்டாப்பாக்ஸ் போல ஒரு சின்ன பொட்டி. அந்த சின்ன பொட்டியோடு ஒரு கீபோர்டு மவுசு மானிட்டரும் இருந்தால் யூ ஆர் ஆல் செட். இந்த சிறிய பொட்டியானது இணையத்தில் இணைக்கப்பட்டிருக்க உங்கள் விண்டோஸ் விஸ்டா முதல் எல்லாமே தூரத்திலுள்ள அவர்கள் டேட்டா செண்டரிலிருந்து தான் வரும். அந்த பொட்டியினுள் எதுவுமே நடப்பதில்லை. சேமிக்கப்படுவதில்லை எல்லாமே அவர்கள் டேட்டா சென்டரிலுள்ள SAN-ல் தான் சேமிக்கப்படும். nDrive என்கின்றார்கள்.10GB இலவசமாம்.Computing power-ஐ இஷ்டத்துக்கும் அப்புறம் கூட்டிக்கொள்ளலாம். Hardware அல்லது software upgrade பிற்காலத்தில் செய்யத் தேவையில்லை. ஒரு நாளும் கிராஷ் ஆகாது எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் என சத்தியம் செய்கின்றார்கள். குறைந்தது 128 Kbps வேக இணைய இணைப்பாவது இருக்க வேண்டும். ஆனால் என்ன ஒரே பிராப்ளம் நாம் காலத்துக்கும் ஹார்டுவேருக்கும் சாப்ட்வேருக்கும் மாதச் சந்தா கட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்

Chennai Google Map

எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.கூகுள் இப்போது இந்தியாவின் மேப் (India Map) போடுவதில் தீவிரமாய் இருப்பது போல் தெரிகின்றது.இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களின் தெரு அளாவிலான மேப்புகளும் சிறு நகரங்களின் தேசிய நெடுஞ்சாலை அளவிலான மேப்புகளும் தயாராக ஆன்லைனில் உள்ளன.குறிப்பாக சென்னை வாசிகளுக்கும் அங்கு வருபவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.T nagar Pothys வரைக்கும் மேப்பில் பார்க்க முடிகிறது என்றால் பாருங்களேன்.சீக்கிரமாகவே டிரைவிங் டைரக்சன் (driving directions ) கொடுத்தாலும் கொடுப்பார்கள்.Great holidays gift from Google.

Madhavan with his wife Sarita Birje

Ranganathan and Saroja, parents of Madhavan, disliked their son's foray into teledramas and adverts, however were forgiving after his selection in Mani Ratnam's Alaipayuthey. Despite Madhavan's ambition of wanting to join the army, his parents insisted he went to management school and do a degree on electronics. After completing the degree, he went on to teach communication and public speaking at workshops around India. At the Maharashtra workshop, he encountered his wife, Sarita Birje, an air hostess, whom he married in 1999.

Their first son, Vedant was born on August 21, 2005, which eventually lead to relocating towards to the boat-club area in Chennai from Kilpauk. Madhavan's parents continue to live with him as do his parents-in-law.

Madhavan Family

உலக நேரம் அறிய

மவுனமாய் சாதனை

1Gbக்கு ஒரு டாலர் என்ற கணக்கில் ஹார்ட்டிரைவுகள் விற்ற காலங்கள் நினைவுக்கு வருகின்றன.நான் கூட இரு வருடங்களுக்கு முன்பு 500 Gb external ஹார்டிரைவ் ஒன்றை 200 டாலருக்கு வாங்கிய நியாபகம். நேற்றைக்கு 1.5Tbஹார்டிரைவ் 118 டாலருக்கு பார்த்தேன். மடமடவென விலை இறங்கியிருக்கின்றது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் எனப்படும் மேசை கணிணிகளின் அந்திமக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் இடத்தை ரொம்பவும் ஆக்கிரமிக்காத மடிக்கணிணிகளே இன்றைக்கு வீடுகளில் ஒன்றுக்கு இரண்டு கிடக்கின்றன.1.5Tb external செங்கற்கட்டியை மடிக்கணிணியின் USB போர்ட்டில் செருகிக்கொண்டு நகர்வதில் நம் "Mobility"-யே தொலைந்துவிடுகின்றது. அதிலிருக்கும் மூவி ஒன்றை பார்க்க வேண்டுமானால் ஒரு மூலையிலேயே ஒண்டி இருக்க வேண்டுமாக்கும். External ஹார்டிரைவை ஒரு மூலையிலே சாத்தி வைத்துக் கொண்டு நாம் நகர்ந்துகொண்டே அதிலிருக்கும் கோப்புகளை படிக்க வசதியுள்ளதா?

இரண்டு சாத்தியங்கள் உள்ளன.
ஒன்று உங்கள் external ஹார்டிரைவை வாங்கும் போதே அது NAS வசதி கொண்டதாய் இருப்பதாய் பார்த்துக் கொள்ளவேண்டும். விலை கொஞ்சம் அதிகம்.
இரண்டு புதிதாக வந்துள்ள Pogoplug.
http://www.pogoplug.com
இந்த வெள்ளை நிற டப்பாவின் ஒரு முனையில் USB போர்ட்டும் மறுமுனையில் நெட்வொர்க் போர்டும் இருக்க அதன் USB போர்டில் உங்கள் external ஹார்டிரைவை இணைத்துவிட்டு அந்த போகோபிளக்கை உங்கள் வீட்டு கம்பியில்லா நெட்வொர்க்கில் இணைத்தால் You are done. அந்த external ஹார்டிரைவை உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் அணுகலாமாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஹார்டிரைவுகளை கூட நீங்கள் அதனோடு இணைத்துக் கொள்ளலாம். விலை 79 டாலர். இது போன்ற ஒரு அற்புத பொட்டிக்காகத் தான் நான் காத்திருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஏன் இது மாதிரியான "obvious"-ஆன படைப்புகளை கூட ஐ.டியில் உச்சத்திலிருக்கும் நம்மால் உருவாக்க முடியவில்லை அல்லது உருவாக்காமல் இருக்கின்றோம். சூப்பர் கணிணிகளை செய்கின்றோம் என்கின்றார்கள். நமக்கு தெரிந்து எதாவது புதுமையான ஹார்டுவேர் நம்மூரிலிருந்து ஜனனமாகியிருக்கின்றதா? ஒருவேளை காசுள்ள நம் பெருசுகளுக்கு R&D ல் பணம் போட மனமில்லையோ? யாரோ வகுத்துச் சொன்னதை தானே நாம் "கோட்"களால் படைக்கின்றோம் புதிதாக எதாவது செய்தோமா?.Hotmail-யை உருவாக்கிய சபீர்பாட்டியாவும் கொஞ்சம் புகழ் கொண்ட நம் Tally-யையும் தவிர வேறு நினைவுக்கு வரவில்லை. அணுகுண்டால் எதிரியை அதிரவைத்தான் ஒரு தமிழன்.இன்னொருவனோ ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கார்களை அள்ளி வந்திருக்கின்றான்.இன்னொரு தமிழன் சந்திரனுக்கே உளவு அனுப்பினது நினைவிருக்கலாம். இப்படி நாம் அவரவர் துறையில் மவுனமாய் சாதித்தால் கையாலாகாதவன் கூட எதாவது காரியமாகப் பார்ப்பான் போலிருக்கின்றது.
(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? I always do)

டைம் பாஸ் சாட்டில்

அவன் பெயரும் கோபால் தான். ஆனால் இன்னொரு கோபால். சரியாகச் சொன்னால் கோபாலிகா-வாம். முப்பது வயது. இந்திய ஐஐடியில் என்னவெல்லாமோ மிகப் பெரிய டிகிரி படிப்புகளெல்லாம் படித்து முடித்து விட்டு பிழைப்புத் தேடி அமெரிக்கா வந்தவன். இணையத்தில் சாட் செய்வதென்றால் அவனுக்கு கொள்ளைப் பிரியம். அதிலும் முகமறியாத அனானிகளிடம் சாட் செய்வது என்றால் இன்னும் இஷ்டம். அப்படித்தான் அந்த பதிமூன்று வயது அமெரிக்க பெண்ணும் அவனுக்கு அறிமுகம் ஆனாள். நிறைய சாட்டியிருக்கின்றார்கள். ஆனாலும் நேருக்கு நேர் பார்த்ததில்லை. அரசியல் முதல் அந்தரங்கங்கள் வரை அநேகம் பேசியிருக்கின்றார்கள். படங்களும் பரிமாறப்பட்டன. எத்தனை நாட்கள் தான் பேசிக் கொண்டிருப்பதாம். நேரில் சந்திக்கலாமே என முடிவெடுத்தார்கள். அதீத எதிர்பார்ப்புகளோடு இந்த கோபாலும் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த மீட்டிங் பிளேசுக்கு போனால் அங்கே இவனை வரவேற்றது ஒரு under cover agent from Chid Predator Unit. அவன் கையும் களவுமாக பிடிபட்டதாகவும் அவனை ஜாமீனில் எடுக்கவே $15000 ஆகுமென சொல்லுகின்றார்கள். எல்லாம் நிரூபிக்கப்பட்டால் இது பெரும் குற்றமாக (First degree felony) கருதப்பட்டு 20 ஆண்டு சிறைத் தண்டனையும் $25000 அபாராதமும் கிடைக்குமாம். பொழுதுபோகாமல் இணையத்தில் விளையாடி அந்த விளையாட்டு இப்போது இவனுக்கு வினையாகியிருக்கின்றது.

மைனர்களிடம் சீண்டுவது இங்கு பெருங்குற்றம். பள்ளிப் பேருந்துகளை நடுச்சாலையில் நிறுத்தும் போது அதில் மின்னும் சிவப்பு ஒளியைக்கண்டு மொத்த சாலைகளும் ஸ்தம்பித்து நின்று சிறார்களுக்கு சாலையைக் கடக்க வழிவிடும். சிறுவர்களை அடித்தாலோ அல்லது திட்டி அது அழுதாலோ Child Abuse என யார் வேண்டுமானாலும் 911 அழைக்கலாம். எல்லாம் டீனேஜ் முடியும் வரை தான். பள்ளி முடிந்து கல்லூரி போனதும் பொத்தி பொத்தி வளர்த்ததெல்லாம் பூ...ம். கோபாலுக்கு இதுவெல்லாம் தெரியாதிருந்ததா? அல்லது தெரிந்திருந்தும் இது ஒரு வெர்சுவல் உலகம் தானே எப்போது வேண்டுமானாலும் Undo செய்துகொள்ளலாம் என நினைத்திருந்தானா? அல்லது அமெரிக்காவில் இதெல்லாம் சகஜமென ஆழம் தெரியாமல் காலையிட்டு பார்த்தானா தெரியவில்லை. இணையத்தின் இன்றைய மெகா பரிமாணம் நம் ஊரில் வருமுன்னேயே இது குறித்துச் சொன்ன "காதலர் தினம்” கூடவா இவன் பார்த்ததில்லை?

இனி சாலையில் போவோறெல்லாரும் இவனுக்கு தேவர்களாகவும் தேவதைகளாகவும் தெரிவார்கள் .இவன் மட்டும் தனக்கு படுபாவியாகத் தெரிவான். http://locator.thevision2020.com ல் Sex Offenders அல்லது Child Predators வரிசையில் இவன் பெயரையும் போட்டாலும் போட்டு விடுவார்கள். உருப்படியாய் எதாவது செய்கின்ற நேரத்தில் சும்மா வம்புக்கு சாட் செய்து வாழ்க்கையை தொலைத்துக் கொண்டான். பாவம் அந்த கோபால்.

Don 't cry ...........


நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!





இளைஞனே!
ஓடுகின்ற கால்கள்
ஓய்வெடுக்கும் போது
நீ எடுத்துக்கொண்ட பயணம்
முடிந்திருக்க வேண்டும்!
வாழ்ந்த நாட்களை
திரும்பிப் பார்க்கும் போது
உன் பெயரை சிலர்
உச்சரிக்க வேண்டும்!
கோபுரங்களின் அழகை
அஸ்திவாரங்கள் தாங்குவது போல்
நீ பிறந்ததின் பயனை
ஊரறியச் செய்
- யாரோ

சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.











மனிதன்
உணவின்றி 40 நாட்களும்
நீரின்றி 3 நாட்களும்
காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம்.
ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது.














நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்

கடல் கடந்து கரையேறலாம்

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்
  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை
  • மிக மிக நல்ல நாள் - இன்று
  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
  • மிகவும் வேண்டியது - பணிவு
  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு
  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
  • மிகக் கொடிய நோய் - பேராசை
  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை
  • நம்பக் கூடாதது - வதந்தி
  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு
  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
  • செய்யக் கூடியது - உதவி
  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
  • உயர்வுக்கு வழி - உழைப்பு
  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
  • பிரியக் கூடாதது - நட்பு
  • மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம் .


துன்பமும் வேதனையும் என உலகம்
ஆனாலும்....
பூக்கள் மலரும்




எட்டாதவை

காண்பது தான் உலகம் அதற்கும் மேல் வேறெதுவும் இல்லை என்பது தான் நம்மில் பலரும் நம்புவது. நம் புலன்களுக்கு எட்டாததால் பொருளுலகம் தவிர வேறுலகம் இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றோம். குத்திருட்டில் நாய் எதையோ பார்த்து குரைக்கின்றது ஊளையிடுகின்றது. நம் கண்களுக்கு எட்டாதது எதுவோ அதற்கு எட்டியிருக்கின்றது எனலாமா? அப்படியே தான் அதன் மோப்ப சக்தியும். புலன் விசாரணையில் துப்பறிய ஒரு நாய் பயன்படுத்தப்படும் போது ஏன் அப்பணியை செய்ய இன்னும் ஒரு ரோபோ உருவாகக்கப்படவில்லை. சில மாயநிலைகள் நம் புலன்களுக்கு மட்டுமல்ல கருவிகளுக்கும் கூட இன்னும் எட்டாதவையே. 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளை நம் சாதாரண காதுகளால் கேட்க முடிகின்றது. அதுவே அதற்கும் மேல் போனால் அதை கேட்க எப்.எம் ரேடியோக்கள் வேண்டும். வெறும் காதுக்கு எட்டாததால் 93.5 -அலைவரிசையில் சூரியன் எப்.எம் இல்லை என்றாகிவிடுமா? பூமிஅதிர்ச்சி வரப்போகின்றதென்றால் மிருகங்களின் புலன்களுக்கு ஏதோ ஒரு வகையில் அச்செய்தி எட்டிவிடுகின்றதாம். மனித ஜென்மத்தால் தான் இன்னும் அது முடியவில்லை. எதாவது ஒரு கருவி கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

திடம் திண்மம் வாயு இந்த மூன்று நிலைகளில் ஒன்றில் தான் பொருட்கள் இருக்கமுடியும் என பள்ளியில் சொல்லித் தந்தார்கள்.
நெருப்பு அது திடமா? திண்மமா? வாயுவா?
சூரியன் அதன் ஸ்டேட் என்ன? திடமா? திண்மமா? வாயுவா?
ஒளி அது துகளா இல்லை அலையா? இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மூன்று தன்மைகளும் சேர்ந்தாப்போல் பிளாஸ்மாவென நான்காவதாக ஒரு நிலை இருக்கலாமென சொல்லிவைத்திருக்கின்றார்கள்.

நம் சரீரம் திடம், நம் இரத்தம் திரவம், நாம் சுவாசிக்கும் ஆவி வாயு, நம் ஆன்மா பயோபிளாஸ்மாவோவென ஒரு தற்காலிக முடிவு.

பொருளுலகில் உள்ளவை நம் புலன்களுக்கும் கருவிகளுக்கும் கட்டுபடும். பொருள்களுக்கு அப்பாற்பட்டவை எப்படி நம் கருவிகளுக்கோ கண்களுக்கோ கட்டுபடும்? அப்படி கட்டுபட்டால் அது பொருள் என்றாகிவிடுமே. எனவே நாம் எப்போது அந்நிலை அடைகின்றோமோ அப்போதுதான் பொருள்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரமுடியும் எனலாமா?

Channel 4 - Dispatches (June 2009) - Terror in Mumbai எனும் ஒரு டாக்குமெண்டரி வீடியோவை சமீபத்தில் காண நேரிட்டது. அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப சமயம் பிடித்தது.
http://www.vimeo.com/5409826

சேகுவேரா

மனிதனுக்கு சரியான பொது அறிவு இல்லாமல் போகுமானால் எந்த அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு அவன் துயரத்தையும் அனுபவிப்பான்.
- ஹோம்ஸ்.

Jeyam Ravi Wedding

Jeyam Ravi is the Son of 'Editor' Mohan & the brother of 'Jeyam' Raja. Its heard that 'Jeyam'Ravi has been in love with 'Aarthi',daughter of film producer Vijayakumar(Veerapu fame). The Marriage between Jeyam Ravi and Aarthi took place on June 4th 2009 at Park sheraton Hall Chennai. The young actor has come a long way after his first film 'Jeyam' in Tamil,which earned him the title 'Jeyam' Ravi.

























Tuesday, September 1, 2009

புதிய முகம்



























கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம் என காலநிலைகளில் நான்கு பருவங்கள் இருப்பது போன்று வேலை கொடுப்போரும் வழக்கம் போல நான்கு நிலைகளில் தலைகளை சுத்திகரிக்கின்றார்கள் . முதலில் எழுத்து தேர்வு, பின்பு தொலைப்பேசி வழி சராமாரி கேள்விகள், அதிலும் தேறிவிட்டால் இறுதியாய் நேர்முகத் தேர்வு. நான்காவதாக எதாவது உங்கள் பேரில் கிரிமினல் கேஸ்கள் இருக்கின்றதாவென பார்க்க பேக்கிரவுண்ட் செக் மற்றும் போதை வஸ்துவுக்கு அடிமையாய் இருக்கின்றீர்களாவென பார்க்க டிரக் டெஸ்ட். இதையெல்லாம் தாண்டி வருவோரை தான் கன்கிராட்ஸ் என சொல்லி பெரும் நிறுவனங்கள் வேலை கொடுக்கின்றார்கள். போன்ற நிறுவனங்கள் இந்த Background Screening Service வேலைகளை கமுக்கமாக அவர்களுக்காக செய்கின்றன. Drug test க்காக Lap corp அல்லது Quest Diagnostics போக வேண்டும். கிரான்பெர்ரி பழரசத்தை மடக் மடக் என குடித்திருந்தால் யூரின் Drug test-ஐ ஏமாற்றிவிடலாமென பரி முன்பு சொல்லியிருக்கின்றாள்.அது ஒரு நல்ல Natural Diuretic என்றாள். புரியவில்லை. தேவையும் இல்லை.

இதையெல்லாம் இங்கு சொல்லவந்ததற்கு முக்கிய காரணம் இந்த ஆளெடுக்கும் படலத்தினூடே இக்காலங்களில் புகுந்துவிட்ட இன்னொரு படிதான். ஓரளவு தேர்வாகி வருகின்ற நபர்களை இன்னும் முறமிட இணையத்தை பயன்படுத்துகின்றார்களாம். உதாரணத்துக்கு குறிப்பிட்ட நபரின் First name மற்றும் Last name-ஐ கூகிளில் தட்ட அது காட்டும் Myspace, Facebook, Linkedin, Blog, Forum பக்கங்களுக்கெல்லாம் சென்று இவரின் இணைய வாழ்வின் லட்சணத்தை அலசுகின்றார்களாம். அங்கு கண்டுபிடிக்கப்படும் இவர் பற்றிய அல்லது இவர் இட்ட தகவல்களும், வண்ணப் படங்களும் பெரிதும் இவரின் உண்மை முகத்தை எளிதில் காட்டுவதாக HR பெரிசுகளெல்லாம் சொல்லுதுகளாம். என் பெயரையும் முழுசாய் டைப்பி கூகிளில் தேடிப்பார்த்தேன் பெரிதாய் ஒன்றும் கிட்ட வில்லை. புனைபெயரை பயன்படுத்துவதில் இப்படி ஒரு லாபம். ஹாயாக கீழ்கண்ட சுட்டியில் இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கோபாலோ டென்சனாய் கூகிளில் தன் பேரைத் தேடிக் கொண்டிருந்தான். கொஞ்சம் துப்புறவு தேவைப்படும் போலிருக்கின்றது. நாளைக்கு பொண்ணு கொடுக்கப்போகும் வீட்டுக்காரர்களும் மாப்பிள்ளை பேரை சும்மாவேனும் கூகிளில் தட்டி எதாவது விவகாரம் சிக்குதாவென தேடிப் பார்த்தாலும் பார்ப்பார்கள்

அதி சின்னப் பயல்

காந்திமதி நாதன் என ஒரு வாத்தியார். சிறுவன் பாரதி படித்த பள்ளியில் ஆசிரியராக இருந்தாராம். இவன் எழுதும் கவிதைகளைப் பற்றியெல்லாம் அதிகம் கேள்விப்பட்ட அவர் பாரதியிடம் கிண்டலாக கேட்டாராம். ”எங்கே! பாரதி சின்னப்பயல் என முடிகிற மாதிரி ஒரு கவிதை எழுது பார்க்கலாம்”. நொடியும் தாமதிக்காது பாரதி கவிதை சொன்னானாம்.
”காந்திமதி நாதனைப் பார்,
அதி சின்னப் பயல்” -என்று

நாமெல்லோரும் சின்னப்பயல்கள் தான். நாமென்ன நம்ம பூமியே இந்த மகா அண்டத்திலும் ஒரு சின்னப்பயலாம். இன்னும் கொஞ்சம் பெஞ்சிலேறி உந்திப் பார்த்தால் நம்ம சூரியனே கூட சின்னப்பயல் தானாம். இந்த அனிமேட்டட் ஜிப் படத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கொஞ்சம் பொறுமை வேண்டுமாக்கும்.

How big is Earth in the Universe
Watch slowly what happens!!! The picture will be changing