Thursday, October 8, 2009

மிஸ்ஸாகும் மூக்கு

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் உள்ளங்கைகளில் தவழ்ந்து விளையாடும் கியூட் லிட்டில் செல்ல டாய்கள் தான் ஐபோன், பிளாக்பெர்ரி, நோக்கியா N95 முதலான ஸ்மார்ட் போன்கள்.

இந்த ஸ்மார்ட்போன்களின் உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் நாம் நினைத்துக்கூட பார்க்க இயலா அளவு இத்துணூண்டு சதுர அங்குலத்துக்குள் எத்தனை கோடி சமாசாரங்களை வைத்து வைத்திருக்கிறான் மனிதன் என்று. அதெப்படிடா நம்ம போன் சும்மா அதிருது...கால் வந்தா சும்மா வைப்ரேட் ஆகுதே அதெப்படிடானு கேட்டுத் தொலைத்தான் கோபால். கப்பாசிட்டர், ரெசிஸ்டர், டயோடு, டிரான்சிஸ்டர் மாதிரி இதற்கும் எதாவது வைப்ரேட்டர் சிப் கண்டுபிடித்து விட்டார்களோவென்பது அவன் யூகம். கொஞ்சம் குறைய அவன் சொன்னது சரிதான். சிப் எதுவுமில்லை. மைக்ரோசைசில் ஒரு எந்திர மோட்டார் உங்கள் போனில் இருக்குமாம். வாசிங்மெசின் வேகமாக சுத்தும்போது அது ”ஒரு மாதிரியா” அதிரும் பாருங்கள் அதே நுட்பம்தான் இங்கேயும். வேறே சிப்பெல்லாம் ஒன்றும் இல்லை.

போனை நீங்கள் குறுக்காக பிடித்தால் திரையை உங்களுக்கு குறுக்காகக் காட்டவும் நெடுக்காக போனை பிடித்தால் திரையை உங்களுக்கு நெடுக்காகக் காட்டவும் Accelerometer என்ற ஒரு சிலிக்கான் சில்லுவை பயன்படுத்துகின்றார்கள். சத்தியமா அது புவியீர்ப்புவிசையை வைத்து பொசிசனை கண்டுபிடிப்பதில்லையாம். பின்னே எப்படி கண்டுபிடிக்குதாம்?
தலைசுற்றுகின்றது.

எல்லா ஸ்மார்ட் போன்களிலும் நம் குரல்கள் அனலாக் தொழில்நுட்பத்தில் கடத்தப்படுவதால் ஒரு Baseband Processor-ம் பிற டிஜிட்டல் மென்பொருள் பயன்பாடுகளை ஓட்ட ஒரு Application Processor-ம் என இரு புராசசர்கள் இருக்கும். நோக்கியா போன்களில் பொதுவாக Texas Instruments புராசசர்களையும், பிளாக்பெர்ரிகளில் Qualcomm புராசசர்களையும், ஐபோன்களில் Samsung மற்றும் Infineon புராசசர்களை காணலாம்.

நமது கோப்புகளை சேமித்துவைக்க ஸ்மார்ட்போன்களின் உள்ளே ஹார்ட் டிஸ்கெல்லாம் கிடையாது. எல்லாம் Gig கணக்கில் NAND Flash DRAM-கள் தான். ஐபோனுக்கு Toshiba-வும்,பிளாக்பெர்ரிக்கும் நோக்கியாவுக்கும் Samsung-கும் இந்த DRAM-களை வழங்குகின்றார்கள். எல்லாம் சிலிக்கான் சில்லுகள் தாம்.

இது தவிர
புவியில் நாம் இருக்கும் இடம் தெரிய GPS,
திசைமாறிப்போனவனுக்கு திசை காட்ட Compus,
வீட்டு அல்லது அலுவலக இணையத்தோடு இணைய Wi-Fi,
பக்கத்து போனோடு இணைந்து MP3க்களை கடத்த Bluetooth மற்றும் Infrared
வேகமாய் திரையில் படம் ஓட, வீடியோ கேம் விளையாட Graphics Processor,
நம்மை நாமே படம் பிடித்துக்கொள்ள Camera ,
எக்ஸ்ரா ஸ்டோரேஜ்க்கு MicroSD Interface,
எப்.எம் பாட்டு கேட்க FM Radio Tuner,
நாம பேசுவதை Dual-band அல்லது Quad-band ஆக கடத்த RF Transceiver.

இப்படி இந்த ஐம்புலண்களில் மெய்(Touch Screen), வாய்(Speaker), கண்(Camera), செவி(Microphone) எல்லாம் சிலிக்கான் சிப் வடிவில் உள்ளே அந்த சிறிய பொட்டிக்குள்.
சிலிக்கான் என்றால் மண் என்று உங்களுக்கேத் தெரியும். எல்லாம் மண். ஆனால் உள்ளே தான் எத்தனை இண்டலிஜென்ஸ் நடக்கின்றது.
மனிதனும் மண் தான். அதே இண்டலிஜென்ஸ்.
இந்த வரிசையில் ஒரே வித்தியாசம் ஸ்மார்ட்போனில் மிஸ்ஸாகுவது மூக்கு.

plz read..................


அதற்காக அவர் நிறைய காகிதங்களில் கிறுக்கியிருக்கிறார் போல.
ஆரம்பகால அவர் இட்ட ஸ்கெட்களை இங்கே பார்க்கலாம்.Jack dorsey on flickr


செல்போன் SMS-ல் 140 எழுத்துக்கள் மட்டுமே கொள்ளும் என்பதால் அதே கட்டுப்பாடு டிவிட்டரிலும் வைக்கப்பட்டுள்ளது.போட்டோக்களை ட்வீட் செய்ய http://twitpic.com -ஐயும் URLகளை சுருக்கி ட்வீட் செய்ய http://tr.im -ஐயும் பயன்படுத்தலாம்.

ஆரம்பகாலங்களில் டிவிட்டர் Ruby on Rails-ல் தான் ஓடியதாம். இப்போது Scala. தங்கள் dns தேவைக்கு dyndns.com-ஐ தான் பயன்படுத்துகின்றார்கள்.

IE என அபூர்வமான இரண்டெழுத்து பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கு மைக்ரோசாப்டின் Internet Explore-க்கு சொந்தமானது http://twitter.com/ie

twitter-ல் அதிக followers கொண்டது ashton kutcher http://twitter.com/aplusk
followers 3,679,355

twitter-ல் அதிக Following கொண்டது Barack Obama http://twitter.com/BarackObama
Following 756709

twitter-ல் அதிகம் updates கொண்டது illstreet http://twitter.com/illstreet
updates 805702

twitter-ல் அதிகம் பேரால் favourite ஆக்கபட்டது yamifuu http://twitter.com/yamifuu
favourites 127709

நம் இந்தியாவிலிருந்து முதல் டிவிட்டர் Pajama Pockets http://twitter.com/pajama
first message on 28/07/2006

கீழே கலிபோர்னியா டிவிட்டர் அலுவகத்திலிருந்து சில படங்கள்




















நான்குமுண்டு

நமது கடந்த மூன்றுண்டு என்ற பதிவை படித்த நண்பரொருவர் இந்த நான்குமுண்டு என்ற வரிசையை நமக்கு அனுப்பித் தந்திருந்தார். விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்.அந்த நண்பருக்கு என் நன்றிகள்.

நம் புத்திக்கு எட்டாத வழிகள் நான்குண்டு.
1.வானத்திலே கழுகினுடைய வழி,
2.பாறைகளின் மேலே பாம்பினுடைய வழி,
3.நடுக்கடலிலே கப்பலினுடைய வழி,
4.ஒரு பெண்ணை காதலித்த மனுஷனுடைய வழி.

போதும் என்று சொல்லாத நான்குமுண்டு.
1.நீத்தார் உலகம்,
2.மலட்டுக் கர்ப்பம்,
3.தண்ணீரால் திருப்தியடையாத நிலம்,
4.போதுமென்று சொல்லாத நெருப்பு.

பூமி தாங்கமாட்டாத நான்குண்டு.
1.அரசனாக மாறிய அடிமையினிமித்தமும்,
2.விரும்பின பதார்த்தங்களெல்லாம் கிடைத்த முட்டாளினிமித்தமும்,
3.பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணினிமித்தமும்,
4.தன் எஜமானிக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
1.அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பு,
2.சக்தியற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் கூடுகளை மலையினிலே தோண்டிவைக்கும் குழிமுயல்கள்,
3.ராஜா இல்லாதிருந்தும், சாரை சாரையாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள்,
4.தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர்கள் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சி.

விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
1.மிருகங்களில் சக்திவாய்ந்ததும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கம்,
2.போர்க்குதிரை,
3.வெள்ளாட்டுக்கடா,
4.ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜா.

ஜிமெயில்காரி

கூகிளின் ஜிமெயில் சேவையானது நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகின்றது. திடீரென அங்கே காலும் இங்கே கைகளும் என உருவாகி அது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இப்படி அது நாளும் பரிணமிப்பதால் அவ்வளவு சீக்கிரமாக எந்த ஜிமெயில் பயனரும் இன்னொரு மெயில் சேவைக்கு எளிதில் மாறிவிடமாட்டார் என்றே தெரிகின்றது. கண்கவர் கலர்களில்லை. ஒரு கவர்ச்சியுமில்லை. ஆனால் எளிமையாகவே நம்மை கவர்ந்துவிட்டவள் அவள். உன்னைத்தானே காதலிப்போம் கரங்குவிப்போமென அந்த 146 மில்லியன் பயனர்களும் சொல்ல தினமும் ஆயிரக்கணக்கான காரணங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இங்கே மூன்று காரணங்கள் உங்களுக்காக.

ஹாட் மெயில்,யாகூ மெயில் போன்ற பிற மெயில் சேவைகளில் இருக்கும் உங்கள் பழைய மெயில்களையெல்லாம் இங்கே ஜிமெயிலுக்கு கொண்டுவர அவளே import வசதி செய்து கொடுத்திருக்கின்றாள். எனவே பல மின்னஞ்சல் கணக்குகளை இனிமேலும் நீங்கள் மெயிண்டெயின் செய்யாமல் அவற்றிலிருப்பதையெல்லாம் உங்கள் ஜிமெயிலில் இறக்குமதிசெய்து விட்டு மற்றவைகளை கமுக்கமாய் ஒழித்துவிடலாம். Settings---> Accounts and Import-ல் இதற்கான வசதிகளை நமக்கு கொடுத்திருக்கின்றார்கள். Esaya Inc-ன் TrueSwitch நுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது.


அவசர அவசரமாக அந்த HR-க்கு மெயில் அனுப்பிய பிறகுதான் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வரும் அய்யே நாம Resume-ஐ அட்டாச் செய்யவில்லையே என்று. உடனே பட்டென அந்த மெயிலை ரிவர்சில் வாங்க இப்போது ஜிமெயிலில் வசதிசெய்து கொடுத்திருக்கின்றார்கள். இதை undo என்பர்.அதிக பட்சம் 10 நொடிகள் தான். அப்புறம் நோ..வே. அது HR பொட்டியில் போய் சேர்ந்திருக்கும்.Settings--->Labs-ல் சுட்டெலியை சுருளிச் சுருளி ரொம்ப கீழே போனால் Undo Send என ஒரு புது வசதியை பார்ப்பீர்கள். அதை enable செய்து கொள்ளவும். ஒவ்வொரு முறை நீங்கள் மெயில் அனுப்பும் போதும் அது undo செய்ய நமக்கு 10 நொடி வாய்ப்பைக் கொடுக்கும். என்றைக்காவது உயிர் காக்கலாம்.


முன்பெல்லாம் மெயில் செக்அப் செய்ய எனது ஐபோனில் ஒவ்வொரு முறையும் அந்த மின்னஞ்சல் பயன்பாட்டை திறக்க வேண்டும். அப்போதுதான் அது போய் ஜிமெயில் செர்வரோடு தொடர்புகொண்டு என் மெயில்களை இறக்கி காண்பிக்கும். இப்போது Push என ஒரு நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அந்த மாதிரி செய்யவேண்டியதில்லை. அப்பப்போ அதுவே என் மெயில்களை உடன் உடன் இறக்கம் செய்து SMS வந்தால் கத்துவது போல அவ்வப்போது கத்துகின்றது. யாராவது மெயில் அனுப்பியிருப்பார்கள்.இந்த வசதியை பிளாக்பெர்ரி,நோக்கியாS60 மற்றும் விண்டோஸ் மொபைல் செல்போன்களிலும் enable செய்து கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டி உங்களுக்கு உதவும். http://www.google.com/mobile/products/sync.html#p=default

இப்படி இலவசமாய் தொடரும் இந்த ஜிமெயில்காரியின் சேவை இன்னும் நீடூழி வாழவேண்டும் என்றேன் நான். ஆனால் அந்த monopoly விஷயத்தில் எனத் தொடங்கிய கோபாலின் வார்த்தைகளையும் மீறி ஓடிச்சென்றது அந்த Amtrak தொடர்வண்டி.

யாருக்குச் சொந்தம்

மூன்றரை சதவீதம் டவுண் பேமண்ட் செலுத்தி FHA கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கி இருக்கின்றாள் நிஷா அவசரம் அவசரமாக. தரமான பாடசாலைகள் உள்ள அமைதியான ஒரு புறநகர்ப்பகுதி.வீட்டெதிரே மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன குடும்பம் குடும்பமாக.இனிமேல் இவள் மாதம்தோறும் மார்கேஜ் எனப்படும் வீட்டுக்கடனை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப செலுத்த வேண்டும்.அடுத்த வருட வரி ஒப்புவிப்பின் போது ஒபாமா 8,000 டாலர்கள் சலுகை கொடுப்பதாக சொல்லியிருக்கிறாராம். அதனால் தான் இந்த அவசரம்.

முப்பது வருடங்கள் கழித்து நீ அத்தனை கடனையும் கட்டி முடித்திருந்தாலும் அந்த வீடு என்றைக்குமே உனக்கு சொந்தம் ஆகாது என்றான் கோபால்.அதெப்படி என நிஷா டென்சனாக கோபால் ஒரு கதை சொல்லவேண்டி வந்தது.

பாண்டி பசார் பிளாட்பாரத்திலிருந்து 500 ரூபாய் கொடுத்து ஒரு காலணி வாங்குகின்றாய் என வைத்துக்கொள்வோம். அதை வீட்டிற்கு கொண்டு சென்று ஒரு மாதமாய் அணிந்து அழகு பார்க்கின்றாய். பூரண திருப்தி உனக்கு. ஆனால் அடுத்த மாத தொடக்கத்தில் உனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கின்றது.அந்த காலணிகடைக்காரன் வந்து உன் வீட்டுக் கதவை தட்டுகின்றான். ஐந்து ரூபாய் கொடு அப்போது தான் அந்த காலணியை நீ வைத்துக் கொள்ளலாம் அல்லது அதை நான் இப்போது எடுத்துக்கொண்டு போய்விடுவேன் என்கின்றான். நீயும் ஐந்து ரூபாய் தானே என அதை கொடுத்து அவனை அனுப்பிவிடுகின்றாய். மீண்டும் அடுத்த மாதமும் உன் வீட்டுக் கதவு தட்டப்படுகின்றது.இப்போதும் ஐந்து ரூபாய் கேட்கிறான். நீயும் கொடுக்கின்றாய். அது பழக்கமாகி இப்போது மாதம் தோறும் ஒன்றாம் தேதியானால் அவன் கறாராக வந்து விடுகின்றான். ஐந்து ரூபாய் கொடுத்தால் நீ வைத்துக்கொள்ளலாம். கொடுக்காவிட்டால் அதை நான் எடுத்துக்கொள்வேன் என்கின்றான். இப்போது சொல் அந்த காலணி யாருக்குச் சொந்தம் உனக்கா அல்லது அவனுக்கா?

அரை மில்லியன் டாலர் கொடுத்து வீட்டை நீ வாங்கி சொந்தமாக்கிக் கொண்டாலும் வருடம் தோறும் நீ சில துக்கடா டாலர்களை வீட்டுவரியாக கடாசாவிட்டால் அவ்வீடு எளிதாக சர்க்காருக்குச் சொந்தமாகிவிடும். அத்தனை ஈவிரக்கமற்ற உலகம் இது என சொல்லி முடித்தான் கோபால். நிஷாவுக்கு மட்டுமல்ல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.

tamil kavithaikal

Sontha Sinthanai:
Sogam Mattumae Vaalkkai Kidaiyaathu!
Sugamagavae Yen Naalum Vaalnthu Vida Vum Mudiyaathu!
Simitum Nam Imaigal Oru Nodi Irutinaal Thaan Nam-maal Pala Nodigal Velichathil Vaala Mudium Yenbathai Mara Vaatheer..

Kavithai Sent by Ms.Nazmudeen


Tholvi enaku puthithalla

athanalthan avanai

marakka vendum

endru ninaikkum bodhu

kooda

En manathodu poradi thotru pogiraen.: ; _()

Kavithai Sent by aishwarya

kaadhalum, natpum
iru kavithaigal
Anbaana natpai

Nesikiren,

nesikum
Natpai

kadhallikiren!

Natpu un meedu
Kadal un natpin meedu.

Kavithai Send by kirthir1994


Nan Kodutha Kadithathai

vaithu Aval

Kappal Vittu

Vilayadi Kondu irukiraal

Thaniril Alla

“Yen Kanneeril”

Kavithai Send by suresh PRP


Karkalum silai aanathu
athu aval udhadugalal
ucharika padum podhu…………
mad in love

Submitted by Simbu





Wednesday, September 2, 2009

பீச்சு வாக்கில்

கை நிறைய பணம் இருக்கும் ஆனால் பொருட்கள் எதுவும் வாங்க முடியாது. அவ்வளவு விலை அதிகமாயிருக்கும்.இது இன்பிளேசன்.தமிழில் பணவீக்கம் என்பார்கள். இன்றைய ஜிம்பாவேயின் நிலை இதுதான்.

கடை நிறைய விலை மலிவாக பொருட்கள் இருக்கும் ஆனால் அதை வாங்க கையில் பணம் இருக்காது.இது டீபிளேசன். அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான். மின்னணு பொருட்களின் விலைகள் கன்னாபின்னாவென குறைந்திருக்கின்றன. வீடுகள் விலையும் தான்.ஆனால் மக்களிடையேயோ வாங்கும் திறன் இல்லை அல்லது பயந்து போய் வாங்க மறுக்கின்றார்கள். முன்னைய பண வீக்கத்தை அப்படியும் இப்படியுமாய் கட்டுப்படுத்தி விடலாமாம். டீபிளேசனை எப்படி கட்டுபடுத்துவது.ரொம்ப கஷ்டமாம்.

உலக பெருசுகள் எல்லாம் ஒன்று கூடி இதற்கொரு தீர்வு காண பேசும் போது ஒரு குளோபல் டீல் கொண்டுவர வேண்டும் என்றார்கள்.சிக்கல்கள் தான் அநேக வாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. அதனால் இதுபோன்ற தருணங்களை இழந்துவிடக்கூடாது. உலக மக்கள் ஒன்றிணைய வேண்டும் சர்வதேச அளவில் ஒரு தீர்வு காணவேண்டும் New World Order என்றெல்லாம் வாய்கிழிய பேசுகின்றார்கள். வீட்டுக்கு வந்ததும் “Be Indian Buy Indian" மாதிரி "American products are our first choice" கணக்காலான சுதேசித்துவம் அல்லது protectionism பேசுகின்றார்கள். இரண்டில் எது வெல்லப்போகின்றதோ தெரியவில்லை. இன்று சுதேசித்துவம் முன்னணியில் இருப்பது போல் தெரிந்தாலும் போகப் போக NWO-தான் வெல்லும் என்பது என் கணக்கு.

இங்கே பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறைக்காக விஷேசத்துக்காக இந்தியா செல்லுமுன் கொஞ்சம் யோசிப்பது நல்லது. பெஞ்சில் இருக்கும் H1B-காரர்கள் விடுமுறை முடிந்து அமெரிக்கா திரும்பும் போது விமானமுனையத்திலேயே அடையாளம் காணப்பட்டு உங்கள் சேவை இப்போதைக்கு எங்களுக்கு தேவை இல்லையென சொல்லப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதாக கேள்விப்பட்டேன். புதிதாக H1B விண்ணப்பிப்பவர்களுக்கும் நிறைய கெடுபிடிகளாம். கிளையண்ட் லெட்டர் வரைக்கும் கேட்கின்றார்களாம். இங்கேயே இத்தனை மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கின்றார்களே அவர்களில் உங்களுக்கு யாரும் கிடைக்க வில்லையாவென நிறுவனங்களை கேட்கின்றார்கள். எல்லாம் பேச்சு வாக்கில் Beach Walk-ல் கேள்விப்பட்டவை. உறுதிப்பட சொல்ல மூலம் எதுவும் இல்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஊர் வருகின்றேன்.Little excited. ஏழு ஆண்டுகளுக்குப் பின் சென்னை வருகின்றேன். உஸ்மான் ரோட்டில் மேம்பாலமெல்லாம் போட்டிருப்பதாகச் சொன்னான். மாமாக்களுக்கு டிமிக்கி கொடுத்து பைக் ஓட்டிப் பழகிய இடம் அது.ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் பங்களூரும் போகலாமென உத்தேசம்.எல்லாம் புது உலகமாயிருக்கும். ஊரிலிருந்து சென்னைபோக ரயில் டிக்கட் முன் பதிவு செய்ய http://www.irctc.co.in சென்றால் சர்வதேச கடனட்டையை ஏற்றுக்கொள்ள மாட்டோமென்று விட்டார்கள். http://www.cleartrip.com உதவும் என்றான் கோபால்.தங்குவதற்கு நல்ல ஹோட்டலொன்றை கண்டுபிடிக்க வேண்டும். போகுமிடமெல்லாம் இணையம் கிடைக்குமாவென தெரியவில்லை. தேர்தல் நெருங்குவதால் மின்சார குறைச்சல் இருக்காதுவென நம்பிக்கை.

மது வலைப்பதிவின் ஐந்து ஆண்டுகள் நிறைவையொட்டி வாழ்த்துக்கள் கூறிய பத்தாம் வகுப்பு மாணவி திவ்யா முதல் 70 வயது பெரியவர் சுந்தர் வரைக்குமான அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் பல.

பாவம் கடவுள்

நிகழ்காலத்தில் நிகழ்ந்துவரும் சில கண்டுபிடிப்புகளை பற்றி கேள்விப்படும் போது நமக்கு தலையே சுற்றிக் கொண்டு வரும் போலிருக்கின்றது. அதிலும் நம்ம ஊர் பசங்க கலக்குகின்றார்கள் என அறியும் போது இன்னும் இரட்டிப்பு் சந்தோசம்.

ஒரு புத்தகக்கடைக்கு சென்றிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரே விஷ்யத்தை சொல்லிக்கொடுக்க மூன்று வேறு புத்தகங்கள் அலமாரியில் உள்ளன. இதில் எதை தெரிந்தெடுப்பது என நீங்கள் குழம்ப இணையமிருந்தால் பலரின் புத்தகவிமர்சனத்தையோ அல்லது ஸ்டார் ரேட்டிங்கையோ பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். கையடக்கமாயிருக்கும் பிளாக்பெர்ரியை தட்டித் தட்டி அந்த மூன்று புத்தகங்களைப் பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்வதற்குள் விடிந்து விடும். அதற்கு பதிலாக நீங்கள் அந்த புத்தகத்தை கையில் எடுத்ததுமே உங்கள் உடம்பிலிருந்து புறப்படும் ஒரு ஒளிக்கற்றை (projector) அப்புத்தகத்தை பற்றிய விவரத்தை அப்புத்தத்திலேயே ஸ்கிரீனிட்டு காட்டினால் எப்படி இருக்கும்? அப்படியே அந்த ஸ்கிரீனை தட்டித் தட்டி வேறெங்காவது விலை குறைவாக இப்புத்தகம் கிடைக்குமாவெனவும் பார்க்கமுடிந்தால்..

பேருந்தில் செய்தித்தாளை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். புதுப்படம் ஒன்று வெளிவந்திருக்கிறதாம். டிரயிலர் பார்க்க ஆசை....பூம்....மீண்டும் உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் செய்யப்படும் அந்த ஒளிக்க்ற்றை யூடியூபில் டிரயிலரை தேடி அந்த செய்திதாளிலேயே வீடியோவாக காட்டும்.டூ..மச்சாக இருக்கின்றதா?

கடிகாரம் கையில் இல்லை என வைத்துக்கொள்வோம்.டைம் சோன் மாறி சால்ட்லேக் சிட்டியில் வந்திறங்கியிருக்கின்றீர்கள். ...பூம்...கையில் கடிகாரம் போல் ஒரு வட்டம் வரைந்தால் போதும் கைக்கடிகாரம் உங்கள் கையில் ஒரு ஒளிவட்டமாகத் தோன்றும்.

இப்படி இணைய கம்ப்யூட்டிங்கை கீபோர்டு இன்றி ஒளித்திரையின்றி அன்றாட பொருட்களின் மேல் செய்ய முனைந்திருக்கின்றார்கள். அங்கு உங்கள் உடம்பிலிருந்து புரஜெக்ட் ஆகும் ஒளிக்கற்றையே திரை. உங்கள் விரல் அசைவுகளே தகவல் உள்ளீடும் கருவி.

கேமராவெல்லாம் வேணாம். விரல்களை கட்டமிட்டு காண்பித்தாலே படம் கிளிக்காகி விடும்.
கைத்தொலைப்பேசியும் வேணாம். கையிலேயே எண்களை புரஜெக்ட் செய்து காட்டி எண்களை தட்டி கால் செய்யலாம்.

மேலே படங்களை பார்த்தாலே புரியும். ஒன்றும் புரியவில்லையா இந்த வீடியோவை ஓட விட்டுப்பாருங்கள். புரியலாம்.

http://www.youtube.com/watch?v=nZ-VjUKAsao

குஜராத்தில் BE-யும் மும்பை IIT யில் MDes -ம் முடித்து விட்டு மேற்கே பறந்த பிரனாவ் மிஸ்டிரி(Pranav Mistry) MIT யில் இப்போது செய்துவரும் இந்த புராஜெக்டின் பெயர் SixthSense.

அம்பதோ அறுவதோ வருடம் கழித்து மூச்சு நின்று சொர்க்கம் போனால் அங்கு இதெல்லாம் இருக்குமாப்பாவென கோபாலைக் கேட்டேன்.
”பாவம்டா கடவுள்” என்றான்.

நிஜமாகவே பொய்

திரையில் வில்லு படத்தை பார்க்கின்றீர்கள். அது இரு பரிமாணம்(2D). ஆனாலும் Dolby Surround DTS எஃபெக்ட்டெல்லாம் கொடுத்து திரையிலில் அதை நிசப்படுத்த பார்ப்பார்கள். அங்கு நம் காதுகள் ஏமாந்திருக்கும்.
அதையே ”மை டியர் குட்டிச் சாத்தான்” படம் பார்த்த மாதிரி 3D மூக்குக்கண்ணாடி போட்டு பார்த்தால் படம் முப்பரிமாணத்தில் இன்னும் எபக்ட் ஏறி நிஜமாகவே நம் கண் முன்னே நடப்பது போல தோன்றும். அங்கு நம் கண்கள் ஏமாந்திருக்கும்.
ஆனாலும் நான்கு பரிமாண எபக்ட் கிடைக்க ”பிரஸ்மீட்டில்” நிஜமாகவே நாமங்கிருந்திருக்க வேண்டும். நான்காவது பரிமாணமாக அங்கு நம் உணர்வில் நேரமும் கலப்பதால் இன்னமும் சுவாரஸ்யம் கூடுகின்றது. ஆனாலும் எல்லாமே பொய். எல்லா பரிணாமங்களிலும் நம் அங்கங்கள் அநியாயத்துக்கும் ஏமாற்றப்பட்டிருக்கின்றன.

உதாரணத்துக்கு நான்காவது பரிமாணமாக மேலே நாம் பார்த்த ”நேரம்” என்பதே பொய் என்கின்றார்கள். பூமியை விட்டு விட்டு விண்ணில் வெகுதூரம் சென்றுவிட்டால் நாளென்றுமில்லை நேரமென்றும் இல்லை.இப்படி நான்காவது பரிமாணமே மாயை என்றாகும் போது மற்ற மூன்றும் கூட மாயையாகத்தான் இருக்க முடியுமோ? நேரம் என்று ஒன்று இல்லாத போதே நாம் இருக்கின்றது எனப்பட்டிருக்கின்றோம். மொத்தத்தில் இந்த நான்கு பரிமாண உலகில் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் போலிருக்கின்றது. ஒரு வேளை நான்கையும் தாண்டி ஐந்து ஆறென பல பரிமாணங்கள் உலகில் இருக்கலாமோ? நம் புலன்களால் தான் அதை உணரமுடியவில்லையோ?

அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்வதற்கு பதில் சொல்லேன் என்றான் கோபால்."பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர அதை ஒரு நாளென்கிறோம். சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றிவர அதை ஒரு மாதமென்கின்றோம். பூமியானது சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் சமயத்தை ஒரு வருடம் என்கின்றோம். இதெல்லாம் தெளிவாக புரிகின்றது. ஆனால் வாரத்துக்கு ஏழு நாட்கள் என்ற கணக்கு எங்கிருந்து வந்தது? புரியாத புதிராக இருக்கின்றதே" என்றான்.

நாள், மாதம் மற்றும் வருடங்களின் வரவு பூமி,சந்திரன்,சூரியனின் நகர்வுகளை வைத்து கணக்கிடும் போது வாரம் மட்டும் எங்கிருந்து வந்தது. அது நமக்கு நெஜமாகவே தேவைதானா எனக் கேட்டான். அடப்பாவி உருப்படியா இருக்கின்ற அந்த வீக்கெண்டுக்கும் ஆப்புவச்சுடுவ போலிருக்கே என்றேன் நான்.

(மேலே படம்: தெருமுனைகளில் 3D படம் வரைந்து இல்லாததை இருப்பது போல் படைக்கும் Julian Beever-ன் 3டி கோக் போத்தல் .மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்கவும். http://dalesdesigns.net/Beever.htm)

கத்தியோடு புத்தி

வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.

ஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.

குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.

ஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது? ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா? நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்?

அங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.

”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!!

நண்பா! நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.

விசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

எலியின் மரணம்

புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.

மடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.

GPS-ம் WPS-ம்

தெல்லாம் சாத்தியமாவென யோசித்துக் கிடக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வேலை மெனக்கெட்டு நாம் ஆரம்பித்த பணியை வெற்றிகரமாக முடிந்தபின் அதற்கு உலகம் தரும் வரவேற்பு அந்த சுமையையெல்லாம் இலகுவான சுகமாக்கிவிடும். புகழ்மிக்க ஆயிரம் பக்க அபூர்வ அரபிக் நாவல் ஒன்றை தமிழ்படுத்த மெனக்கெடுவது போன்றது அப்பணி. கூகிள் மேப்பில் காணப்படும் ஸ்டிரீட் வியூ வசதியைக் கொண்டுவர தெருதெருவாகப் போய் வேலைமெனக்கெட்டு வீடியோபிடித்து கணிணியில் ஏற்றினார்களாம். இறுதியில் நல்ல வரவேற்பு. இது போல இன்னொரு கும்பலும் தெரு தெருவாக ஆட்களை அனுப்பியிருக்கின்றார்கள். ஆனால் இன்னொரு வேலை விஷயமாக.

ஒரு பொருளின் இருப்பிடத்தை கண்டறிய சேட்டலைட் வழியாலான ஜிபிஎஸ் (GPS) நுட்பங்கள் பிரபலமாயினும் அதின்மீதுள்ள நம்பிக்கை வல்லரசுகளுக்கே திகிலைத்தந்துள்ளன. உள்ள 24 சேட்டலைட் கும்பலில் ஒன்று செயலிழந்தாலும் நம் ஜிபிஎஸ் கருவிகள் சுணங்கிவிடுமாம். சியாட்டிலின் வானுயர் டவுண்டவுன் கட்டிடங்களினூடே கார் புகுந்ததும் இந்த ஜிபிஎஸ் கருவிகளால் சேட்டலைட்டை தொடர்புகொள்ள இயலாமல் போவதால் அவை கப்சிப்பாகின. இறைவனை வேண்டத்தொடங்குவோம்.

சேட்டலைட் நுட்பத்தை பயன்படுத்தாமல் அருகே இருக்கும் செல்போன் டவர்களை தொடர்புகொண்டு அது வழியாக நம் இருப்பிடத்தை கண்டறிவது இன்னொரு வழி. பேருந்தில் பயணிக்கும் போது நாம் ஊர்களைத் தாண்டிச் செல்லும்போது உங்கள் போனிலும் டவர் ஊர் பணகுடியிலிருந்து வள்ளியூருக்கு மாறுவதை கவனித்திருப்பீர்கள். ஆனாலும் ஒரு சின்னப் பிரச்சனை. அதுவால் வள்ளியூரில் நீங்கள் எந்த டீக்கடை முன்னால் டேராபோட்டுள்ளீர்கள் என மிகச்சரியாக சொல்ல முடியாது.

Wi-fi நான் எதிர்பார்த்த அளவுக்கு நம் ஊரில் புழக்கத்தில் இல்லை. குறுகிய டூரில் போன இடமெங்கும் ஒரு Wi-fi கூட கண்ணில் அகப்படாதது என் துரதிஷ்டமாகக் கூடயிருக்கலாம். இங்கே தெருவில் எங்கு போயினும் Wi-fiகள். பெரும்பாலும் Secured தான். இந்த Wi-fiகளை வைத்தே நாம் இருக்கும் இடத்தை அடையாளம் காணலாமென ஒரு கும்பலுக்கு தோண தெருத் தெருவாகப் போய் எந்த தெருவில் எந்தெந்த Wi-fi-க்கள் உள்ளன என குறிப்பெடுத்து ஒரு பெரிய டேட்டாபேசையே உருவாக்கியுள்ளனர் Skyhook காரர்கள். உலகமெங்கும் மொத்தம் பத்து லட்சம் Wi-fi களை குறித்து வைத்திருக்கின்றார்கள். உங்கள் இருப்பிடத்தை ஒருவர் கண்டறிய சேட்டலைட்டெல்லாம் போகவேண்டாம். பக்கத்தில் ஒரு Wi-fi இருந்தாலே போதும். Wi-Fi Positioning System (WPS) எனப்படும் இந்த நுட்பம் வழி இயங்கும் http://loki.com-ல் என் இருப்பிடத்தை கேட்டுப்பார்த்தேன் இரு நொடிகளில் மிகச் சரியாகச் சொன்னது. வழக்கமான என் GPS-சோ "Waiting for accuracy" - என சொல்லிக்கொண்டே இரு நிமிடம் எடுக்கும். அதுபோல துல்லியமும் மாறுபடுகின்றது. மேலே இடது படம்-WPS உதவி இல்லாமல் அவ்வளவு துல்லியமாக இல்லை, வலது படம்-WPS உதவியுடன் மிக துல்லியமாக இருக்கின்றது. இந்த மாதிரியான location aware பயன்பாடுகளால் நமக்கு நன்மைகள் என்னவாம்? உங்கள் இருப்பிடத்துக்கு மிக அருகிலுள்ள ஜெராக்ஸ் கடையை அல்லது மருந்து கடை எதுவென ஒரே சொடுக்கில் தெரிந்து கொள்ளலாம்.

கான் பட கோப்புகள் சிலசமயங்களில் தனியான .ico கோப்பாக வராமல் .exe அல்லது .dll கோப்புகளுக்குள் புதைந்து இரண்டற கலந்து ஒன்றாக வரும். இதுபோன்ற சமயங்களில் ஐகான் அல்லது .ico பட கோப்புகளை தனியாக பிரித்தெடுக்க icofx அல்லது GetIcons மென்பொருட்களை பயன்படுத்தலாம். சுட நல்ல டூல்.

பேசுங்க பேசுங்க


புதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும் தொழில்நுட்ப நன்மைகளை கொடுக்க அவர்கள் தயங்குகிறார்கள். கடலிலிருக்கும் உப்பையெல்லாம் எடுத்து தரையில் கொட்டினால் உலகம் முழுக்க 500 அடி உயரம் வரைக்கும் அது நிரம்பி கிடக்குமாம். அதற்காக இலவசமாக உப்பைக் கொடுக்கச் சொல்லவில்லை. உப்பைபோல விலை குறைத்துக் கொடுக்கலாமே.

http://betacalls.com என ஒரு தளத்தை நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்தியிருந்தார். 10 டாலருக்கு 333 நிமிடம் வரைக்கும் பேசலாமாம். Hotspot போன்ற VPN மென்பொருள்கள் எதுவும் தேவையில்லை. முயன்றுபார்த்து சொல்லுங்கள்.

அதுபோல http://www.nettelsip.com (NetTelePhone) என ஒரு தளம் UAE-யிலிருந்து இந்தியாவிற்கு பேச நிமிடத்திற்கு 0.069 அமெரிக்க டாலர் வாங்குகிறார்களாம். அவர்கள் தளத்திலேயே UAE-யின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதால் ஒருவேளை இத்தளம் சட்டப்படி அனுமதிபெற்றே நடத்தப்படுகின்றதோ என்னமோ? குறைந்த விலையிலேயே நிறையப் பேசலாம்.

“உலகில் முதல் பேசும் கருவியை கண்டுபிடித்தவன் நானல்ல. அது கடவுள்தான். நான் கண்டு பிடித்த கருவியை இடையிலேயே நிறுத்தி பேசவிடாமல் செய்ய முடியும். ஆனால் இறைவன் கண்டு பிடித்த கருவியோ பேச ஆரம்பித்தால் அப்புறம் அதை நிறுத்தவே முடியாது. அந்த கருவிதான் பெண்கள்” என வேடிக்கையாக ஒருமுறை பிரபல விஞ்ஞானி எடிசன் அவர்கள் பேசியதாக சொல்வார்கள். பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க.

Torrent ஐப் போலவே ஒரே Click ல் ஆங்கிலப் படங்களை download செய்வதற்கு மிகச் சிறந்த வலை தளம் என கீழ்கண்ட தளமொன்றை அறிமுகப் படுத்தியிருந்தார் இன்னொரு நண்பர்.
http://oneclickmoviez.com

தொடர்ந்து இதுபோன்ற பல பயனுள்ள நல்லத் தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பெருவாரியான பின்னூட்டங்கள் வழியும் மின்னஞ்சல்கள் வழியும் மீண்டும் மீண்டு வந்ததற்கு வாழ்த்துதல்கள் கூறி உற்சாகமூட்டிய அனைத்து இனிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். சில சமயங்களில் ஆச்சரியமாயிருக்கும் இத்தனை நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் எதற்காக வருகின்றார்கள் என்று.
இன்னொரு புரியாத புதிர்?!

சாதாரண பிரிண்டரிலிருந்து புத்தகம்

காகிதத்தின் இருபக்கத்திலும் பிரிண்ட் செய்யும் வசதி உள்ள (இதை Duplexing என்பார்கள்) பிரிண்டர் உங்களிடம் இல்லாவிடினும் சாதாரண மலிவு பிரிண்டர் மூலம் கூட தாளின் இருபக்கமும் அச்சிட்டு ஒரு புத்தகம் போல செய்யலாம் என நம் நண்பர் முகம்மது இஸ்மாயில் விளக்கியிருந்தார். அது எப்படி என அனைவருக்கும் பயன்படட்டுமேயென இங்கு ஒரு பதிவாகவேயிடுகிறேன்.

”விலை அதிகம் உள்ள பிரிண்டர்களில் தான் ஒரே நேரத்தில் இருபுறமும் அச்சிட இயலும். ஆனால் Canon LBP2900 போன்ற விலை குறைவான Entry Level Printer களிலும் இதை செய்ய இயலும். அதற்கான வழிமுறை இதோ,,,

மொத்தம் 150 page உள்ள doc.file லை புத்தகம் போல பிரிண்ட்செய்ய வேண்டி உள்ளது என்றால் 75 காகிதத்தை மட்டும் பிரிண்டரின் ட்ரேயில் வைக்கவும். இல்லை அதைவிட அதிகமாக வைத்தாலும் பிரச்சினை இல்லை.

பிறகு படத்தில் உள்ளபடி Print Range - All, மற்றும் Print - Odd Pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 1,3,5,7 ….. 149 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும்.

பிறகு ட்ரேயில் மீதம் உள்ள வெற்று தாள்களை எடுத்துவிட்டு பிரிண்ட் ஆகி வந்த 1 to 149 Odd Pages 75 சரியாக ட்ரே உள்ளே வைத்து மறுபடியும் ப்ரிண்ட் கொடுக்கவும். இப்ப அதில் Even pages என செலக்ட் செய்யவும். இப்ப பிரிண்ட் கொடுத்தால் 2,4,6,8 ….. 150 வரை பிரிண்ட் ஆகி பிரிண்டருக்கு வெளியே அடுக்கி வைத்துவிடும். அவ்வளவுதான் விஷயம்.

குறிப்பு - இதில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் பிரிண்டரானது பிரிண்ட் பண்ணி அடுக்கும் முறை தான். அதில் சரியான பக்கத்தை வைத்தால் தான் இரண்டு பக்க பிரிண்டிங் சாத்தியம். இல்லையென்றால் ஒரே காகிதத்தின் ஒரே பக்கத்திலேயே இரண்டு பக்கத்தையும் பிரிண்ட் செய்துவிடும். அல்லது அடுத்த பக்கத்தை தலைகீழாக பிரிண்ட் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆகவே உங்கள் Document முதல் நான்கு பக்கத்தை மட்டும் சோதனை முறையில் வெறும் இரண்டு காகித்தை வைத்து பிரிண்ட் செய்து இதை நன்றாக புரிந்து செய்யவும். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையில் தேவையற்ற வீணடிப்பு சோதனைகள் வேண்டாம். LOL.”

நன்றி முகம்மது இஸ்மாயில்!!

xMax எனப்படும் wireless technology குறித்து அவர் விசாரித்து கேட்டிருந்தார். சுத்தமாக எனக்கு பரிச்சயம் இல்லாததால் மவுனமே எஞ்சியது. இந்நுட்பத்தை நம்மில் யாராவது பயன்படுத்தி இருந்தால் அனுபவத்தை சொல்லலாமே. பதிலுதவியாய் இருக்கும்.

"நண்பன் - உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளும் பரிசு” என்றார் ஒருவர். பரிசுகளினால் பயன் உண்டு. ஆனால் அவற்றை விலை கொடுக்காமல் வாங்கமுடியாது. உண்மைதான்.

ண்பர்கள் சிலர் மென்புத்தகங்களை இறக்கம் செய்ய முடியவில்லையே என புகார் சொல்லியிருந்தார்கள். தீர்வாக http://www.scribd.com -ல் ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டும்.

லையில் சிக்கிய ஒரு தமிழ் MP3 தொகுப்பு உங்கள் பார்வைக்கு.
http://www.nkdreams.com/music/index.php?dir=

சாணக்கியன் சொன்னது

கிமுக்களில் வாழ்ந்து சந்திரகுப்த மவுரியரின் அரசவையை அலங்கரித்த சாணக்கியர் அர்த்தமாய் பல விஷயங்களை தனது அர்த்தசாஸ்திரத்தில் சொல்லிப்போயிருக்கிறார்.அந்த கால தட்சசீல பல்கலைக்கழகத்தில் புரபசராய் இருந்தவராச்சுதே. சிறந்த ராஜ தந்திரி. அவரது பொன்னான வாக்குகள் சில இங்கே.

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம் வளைந்து கொடுங்கள். வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.

இங்கு விஷமற்ற பாம்பு கூட தன்னை விஷமுள்ள பாம்பு போல காட்டிக்கொள்ள வேண்டுமாக்கும்.

உன் இரகசியங்களை எவரிடம் பகிர்ந்து கொள்ளாதே. அது உன்னை அழித்து விடும். இது தான் மிகப்பெரிய குரு மந்திரம்.

ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே.

ஒரு வேலையை செய்யத்தொடங்கும் முன் இந்த மூன்று கேள்விகளையும் கேட்டுக்கொள். ஏன் இதை செய்கின்றேன்? இதன் முடிவு என்னவாக இருக்கும்? இதில் நான் வெற்றிபெறுவேனா இல்லையா? என ஆழமாக யோசித்து அதில் நல்ல விடைகள் கிடைத்தால் மட்டுமே அந்த பணியை செய்யத் தொடங்கு.

பயம் உன்னை நெருங்கத் தொடங்கும் போதே அதை தாக்கி அழித்து விடு.

ஒரு பணியைச் செய்யத்தொடங்கியப் பின் தோல்வியைகுறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.

மலர்களின் வாசம் காற்று வீசும் திசையில் மட்டுமே போகும்.ஆனால் ஒருவர் செய்யும் தர்மமோ நாலாதிசையும் செல்லும்.

ஒருவன் தான் செய்யும் செயல்களாலேயே மகானாகின்றான். பிறப்பினால் அல்ல.

உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.

குருடர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி எப்படி உதவாதோ அப்படியே முட்டாள்களுக்கும் புத்தகங்கள் உதவாது.

கல்வியே சிறந்த நண்பன். நன்கு கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை உண்டு. கல்வியானது இளமையையும் அழகையும் வீழ்த்திவிடும்.

சம்பந்தப்பட்ட இன்னொரு பதிவு
பெருசு சொன்னது (ஐன்ஸ்டீன்)


சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!


தமிழர் திருமணம்

பள்ளிக்குப் பிறகு வழிகள்

பத்துக்குப் பிறகு பன்னிரண்டுக்குப் பிறகு என்ன செய்யலாமென யோசிப்பவர்களுக்கு ஒரு அருமையான விளக்கப்படம் இங்கே.
படத்தை சொடுக்கி அதை பெரிதாக்கிப் பார்க்கலாம். படிக்கலாம்.

Career Path Finder after higher secondary school SSLC or Plus two.

for zoom and see

வன்பொருள் காட்சியகம்

மதர்போர்டு (Mother board) டாட்டர் போர்டு (Daughter board) என்றிருந்த காலமெல்லாம் போய் இன்றைக்கு வித்தியாசமான காகிதம் ஒன்றில் ஒருவிதமான சிலிகான் மை கொண்டு இந்த மின்னணு சர்கியூட்டு போர்டுகளையெல்லாம் எளிதாக அச்சடிக்கலாமாவென Kovio காரர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கான ஆய்வில் மில்லியன் கணக்கில் செலவும் போய்க் கொண்டிருக்கின்றது. ஆய்வின் முடிவில் உங்கள் கை மணிக்கட்டின் தோல்பரப்பில் அழகான கைக்கடிகாரத்தை அச்சிட்டு அனுப்பிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதை சூப்பர் அனிமேசனோடு எலக்ட்ரானிக் டாட்டூ என்பார்களாயிருக்கலாம். (Electronic tattoo).ஜாலிதான். அதுவரைக்கும் இன்றைய நம் பெரிய ஹார்டுவேர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மொத்தமாக இதோ அவையெல்லாம் ஒரே சார்ட்டில். படத்தை கிளிக்கி பெரிதாக்கியும் பார்க்கலாம்.


Computer Hardware Chart

தெரிந்த மென்பொருள்கள் தெரியாத பயன்பாடுகள்

அன்றாடம் நாம் பயன்படுத்தும் சில மென்பொருள்களில் ஒளிந்திருக்கும் பயன்பாடுகளை சாமானியர்களுக்காக இங்கே தனித்திட விரும்பினேன்.

1.உங்கள் விண்டோஸ் கணிணியில் ஏற்கனவே உள்ள சாதாரண Windows Media Player மூலம் உங்கள் ஆடியோ சிடியிலுள்ள இசைக்கோடுகளையெல்லாம் MP3-யாக மாற்றி கணிணியில் சேமிக்க முடியும் தெரியுமோ? அதிலுள்ள Rip வசதியை பயன்படுத்தலாம்..


2.Windows Media Player Classic மூலம் ஒரு மூவியின் ScreenCaps-யை கீழ்கண்டது போல் அழகாக ஒரே சொடுக்கில் எடுக்கலாம் தெரியுமோ?

Download Windows Media Player Classic
http://www.free-codecs.com/Media_Player_Classic_download.htm

3.இப்போது இலவசமாக கிடைக்கும் RealPlayer SP BETA மூலம் ஒரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டை இன்னொரு வீடியோ/ஆடியோ ஃபார்மேட்டாக எளிதாக மாற்றலாம் தெரியுமோ?

Download RealPlayer SP BETA
http://www.real.com

How to use RealPlayer's free media converter in 3 short steps:
1) Download your video or audio file to your computer.
2) Click on the "Copy To" link next to the video.
3) Select your device from the list and RealPlayer SPBeta will automatically convert your file to the right format and transfer it to your device

4.Microsoft Office 2007 கோப்புகளை நேரடியாக MS Office-யிலிருந்தே PDF கோப்புகளாக சேமிக்கலாம் தெரியுமோ?. Save as PDF Add-in-ஐ பயன்படுத்துங்கள்

Download
http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=f1fc413c-6d89-4f15-991b-63b07ba5f2e5&displaylang=en

5.விண்டோஸ் டெக்ஸ்டாப்பில் பலவகையான கோப்புகளையும் நாம் தாறுமாறாக அப்படியும் இப்படியும் போட்டிருப்போம். Wallpaper எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே மிக பயனுள்ளதாக பயன்படுத்த இதோ ஒரு எளிய வழி.
சாதாரண விண்டோஸ் வால் பேப்பர் இப்படி இருக்கும்.

அதையே இப்படி பயனுள்ளதாகவும் மாற்றலாம்.

Download
http://antbag.com/desktops